நீ இல்லா நானாய்
நீ இல்லா நானாய்
எழுத ஆசை கொண்ட போது
முள் உடைந்த பேனாவாய்
கனவை கண் கொண்ட போது
தொலைந்த துயிலாய்
தரை தொடும் முன்னே
காற்று கொண்ட கார்முகில் நீராய்
உயிர் தொலைத்த
ஊன் இங்கே இடராய்
காலத்தின் பதில் நினைவாய்
காலத்தின் வினா மௌனமாய்
நிலையான நினைவோ
நிலையில்லா வாழ்வை எரிப்பதாய்
இன்பம் துன்பம் எல்லாம்
இறுதியை நோக்குவதாய்
கரையில்லா கடலாய்
வெளிச்சம் இல்லா விடியலாய்
தேடி தொலைத்தவனாய்
நீ இல்லா நானாய்...