நேசிப்பதற்காக சுவாசித்தவளே
நேசிப்பதற்காக சுவாசித்தவளே
எனக்காக மண்ணில் பிறந்தாய் நீ
உனக்காக உன்னுள் மலர்ந்தேன் நான்
என் முதல் சொந்தம் நீ
உன் முடிவில்லா சொந்தம் நான்
என் வாழ்வின் இன்பம் நீ
உன் அன்பின் பிம்பம் நான்
என் இதயத்தினை இயக்குபவள் நீ
உன் மனதினை மயக்குபவள் நான்
என் கிறுக்கல்களுக்கு வண்ணம் அளித்தாய் நீ
உன் வாழ்வின் வண்ணமாய் வாழ்வேன் நான்
என்னை நேசிப்பதற்காக சுவாசித்தவளே
என் மூச்சின் முழுதும் நீயடி
என் தாயே
என்றும் நீ என் மகளடி