முருகா வருவாய் அருள் தாராய்
முருகா வருவாய் அருள் தாராய்
கந்தா கடம்பா கதிர்வே லவனே
எந்தன் ஞானம் எழுகவே யருள்வாய்
என்மேல் கருணை எனக்கா யருள்வாய்
உன்பொருள் பாடவும் உறுதுணை யருள்வாயே
அறுபடை முருகன் அருள்தரும் குமரன்
ஒறுத்தல் தவிர்க்கும் ஒப்பில்லாத் தலைவன்
மறுமையை விலக்கும் மயிலோன்
வெறுமையைப் போக்கி வெற்றியும் தருவானே
பணிந்தேன் சிரத்தை படைத்தவன் உன்னிடம்
துணிந்தேன் வேலுடன் துணையா யென்றும்
கிட்டா தன்பும் கிடைக்கும் குகனிடம்
எட்டா முக்தியும் எடுபடும் இயைந்தே
மணிமாறன் கதிரேசன்