மனதில் நிறைந்தவளுக்கு
மனதில் நிறைந்தவளுக்கு
கயல் போன்ற கண்களை உடையவளே,
முத்து போன்ற சிரிப்பை உடையவளே,
தாமரை இதழ்களை ஒத்த உதடுகள் கொண்டவளே,
என் வலிகளை மறந்து போனேனே உன் சிரிப்பு முகம் கண்டு,
அதனால் என் மனதில் உண்டானதோ ஆயிரம் ஆயிரம் மலர் சோலைகள்,
நீ என்னை விட்டு விலகி சென்றாலும் இடைவிடாது என் காதுகளில் ஒலிக்கிறது உன் காலடி கொலுசுகளின் சப்தங்கள்.