STORYMIRROR

S. Meena

Inspirational

4.1  

S. Meena

Inspirational

மழை

மழை

1 min
532



நீல மேகங்களெல்லாம்

கார்மேகமாகனும்...!

கொதித்திடும் அணல்காற்று

 குளிர் தென்றலாகலாகனும்..!


மாபெரும் நகரத்திலே

மண்வாசம் வீசனும்..!

மண்ணிலே மழைவந்து

மரங்கள் மகிழனும்..!


செடிகொடிகள் செழித்து

விவாசாயி சிரிக்கனும்..!

பஞ்சமெல்லாம் பறந்தோடி

பசுமை நிறையனும்.!


கொட்டிடும் அடைமழையில்

குடையின்றி நனையனும்..!

தேங்கி நிற்கும் நீரோடையில்

கப்பல்விட்டு ரசிக்கனும்..!


சத்தமிடும் இடியோடு

சங்கீதம் பாடனும்..!

மின்னலில் போட்டோ எடுத்து

ஜன்னலில் மாட்டனும்..!


கிடைக்குமா...

இக்கனவுகள் எல்லாம் 

நனவாகும் வரம் 

கிடைக்குமா...?


வருணனே....!

ஓடி வருவாயோ...!

கர்ணனாய் மாறி

மாரி பொழிவாயோ..! 💙



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational