STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

குழந்தைகள்

குழந்தைகள்

1 min
392

அனைவரையும் பாரபட்சம் இன்றி

கடல் போல சேர்த்துக்கொண்டு

பழகும் குணம் குழந்தைகளுக்கு.

குழந்தைகள் ஒருவருக்கொருவர்

சண்டை போட்டாலும் நிமிடத்தில்

தங்களை இணைத்துக் கொள்ளும்

மனப்பக்குவம் உடையவர்கள் .

தனக்கு உணவு கிடைத்தால் தான்

இனத்தையே கூட்டி உண்ணும் காகம்

போன்ற எண்ணம் உடையவர்கள்

குழந்தைகள்.

உயர்வு தாழ்வு பார்க்காமல் சக

நண்பர்களுடன் பழகும் குணம்

கொண்டவர்கள் குழந்தைகள்.

வெண்மை நிற பால் உடலுக்கு சக்தி

வெள்ளை மனம் கொண்ட குழந்தைகள்

நல்ல நட்புக்கு சக்தி.

குழந்தை பருவம் நிலையில்லாதது தான்

ஆனால் அந்த பருவத்து நினைவுகள் ஒரு கட்டிடத்தின் தூண் போன்று உறுதியானது

ஏன் என்றால் அந்த தூண்கள் தான் மீண்டும்

நினைவுகளாக முதுமையில் மனதை வருடி ஆறுதலாக இன்பத்தை தருகின்றது.  இந்த உலகில் அனைத்து குழந்தைகளும் தங்கள்

குழந்தை பருவத்தில் மனதை பக்குவப் படுத்திக்கொண்டுநல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டுவாழ்வில் சிறப்புடன் வாழ அனைத்து குழந்தைகளுக்கும் எனது குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational