கல்லாங்காய் ஆட்டம்
கல்லாங்காய் ஆட்டம்
லாக்டவுனில் சிறிய வயதில் விளையாடிய கல்லாங்காய் ஆட்டத்தின் நியபாகபடுத்திய பாடல். வரி இதோ
(ஏழாங்காய் ஆடும் பொழுது படப்படும் பாடல்)
ஒன்னாம் காய் ஆடும் பொழுது:-
கல்லா கல்லா கம்மாட்சு அம்மா பூமா தேவி தெருவுலா வருவா, ஓரு கொட்டு கொட்டுவா ஓடி போவா¦
இரண்டங்காய் ஆடும் பொழுது
இரட்டை இரட்டை இராமராஜு இரட்டை கோழிக்கால் சொட்டை
மூன்றங்காய் ஆடும் பொழுது
மூக்கோடு தக்கோடு முன்னாம் படிக்கட்டு
நான்காம் காய் ஆடும் பொழுது
நாலை நாடந்து வா, பாம்பே படர்ந்து வா,
ஐந்தாங்காய் ஆடும் பொழுது
ஐவார் அரைக்கும் மஞ்சள், தெய்வம் குளிக்கும் மஞ்சள்
ஆறாங்காய் ஆடும் பொழுது
கோர் கோர் சித்தப்பா, குறுக்கவாட பெரியப்பா
அதற்கு மேல் உள்ள பாடல்களின் வரிகள் நியபாகத்தில் இல்லை.