காதலுக்கு கண் இல்லை
காதலுக்கு கண் இல்லை
ஏன் இந்த கவிஞர்கள்
பெண்களின் கண்களை மட்டும்
இப்படி வர்ணிக்கிறார்கள் என்றிருந்தேன்,
கயல்விழி கொண்ட அவளை
வயல்வெளியில் காணும் வரையில்!..
புயல் அடித்து ஓய்ந்தது போல்,
செயல் இழந்து நின்றேன்....
புள்ளி மான்களை போல் துள்ளி ஓடும் அவள் கண்களை பார்த்து....
கருவிழி இரண்டில் திருவிழா கண்டேன்...
உணர்ந்து கொண்டேன் பெண் அவளை கண்டபோது,
காதலுக்கு கண் இல்லை என்று!.....