STORYMIRROR

anuradha nazeer

Tragedy

3  

anuradha nazeer

Tragedy

காதலா இது தான் காதலா?

காதலா இது தான் காதலா?

1 min
231


காதல் என்றாலே கண்ணீர் மட்டும்தானா? கனவுகள் மட்டும் தானா?

உறவாடி நெகிழ வைத்து மகிழ வைத்து கண்ணீரில் கரைவது தான் காதலா?


நெஞ்சோடு    உறவாடி   நினைவுகளோடு கட்டுண்டு 

நிம்மதியாக நீயும் நானும் காலம் தள்ள மாட்டோமா?

எதிரெதிரே மட்டும் தான் காதலா?

அருகருகே காதல் என்றுமே இல்லையா?தொட்டிலையும் ஆட்டி விட்டு தொட்டில் பிள்ளையையும் கிள்ளி விட்டு 

அதுதான் காதலா?

உணர்ச்சிகளின் மிரட்சிகளின் உச்சம் தான் காதலா?

என் உணர்வுகளுக்கு உருவமே கிடையாதா?வேண்டாம் என விலகி விலகி நின்றாலும்

விரட்டி விரட்டி உணர்ச்சிகளை தூண்டுவது தான் காதலா???

காதலா இது தான் காதலா?



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy