இனிமை தந்தவள்
இனிமை தந்தவள்
உன்னைப் பற்றி எழுத
என் கற்பனையயில்
என்றும் வறட்சி ஏற்பட்டதில்லை!
நிலவு வதனத்தில்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவள் நீ
உன் இதயத்துடிப்பால்
என்னில் குருதியோட்டம்!
புரியாத புதிர்!
உன் பார்வையின்
மின் தாக்குதலினால்
என் நியூரான்களில் கிளர்ச்சி!
உன் புன்சிரிப்பின் ஓளியால்
என் மனதில் வெளிச்சம்!
உன் உச்சரிப்பு இனிமையால்
என் இதயத்தில் இசைக்கச்சேரி!
எனக்கு மழையில் நனையும்
சுகம் கற்றுத் தந்தவள் நீ!
என் வார்த்தைகளுக்குக்
கவி வடிவம் தந்தவள் நீ!
என் உளத்திற்கு
வலிமை தந்தவள் நீ!
என் வாழ்வுப் பாதையை
வடிவமைத்தவள் நீ!
வாழ்வின் வசந்தமாய்
மலரின் சுகந்தமாய்
என்னுள் சந்தமாய் என்றும் நீ!