என் படைப்புகளின் தொகுப்பு-1
என் படைப்புகளின் தொகுப்பு-1
இயற்கை - ஒரு உயிருள்ள கடவுள்:
மழை மேகத்தை சார்ந்து மேகம் காற்றைச் சார்ந்து காற்று மரங்களைச் சார்ந்து மரங்கள் நீரைச் சார்ந்து நீர் மண்ணைச் சார்ந்து மண் ஒளியைச் சார்ந்து ஒளி சூரியனைச் சார்ந்து இருக்க;
சூரியன் உதிக்க பறவைகள் பாட காற்று வீச மரங்கள் அசைய அலைகள் ஆர்ப்பரிக்க மேகங்கள் நகர்ந்து மழை பொழிய வானவில் பிரகாசிக்க சந்திரன் ஒளிர இருள் வானத்தை நிரப்ப மக்கள் கூட்டம் ஓய்வு எடுக்க;
சில சமயங்களில் அமைதியே அமைதிக்கான வாழியாக,
சில நேரங்களில் வன்முறை அமைதிக்கான வழியாக மாற,
வாழ்க்கையில் சரியான துணை அமைதியில் திழைக்க,
நீண்ட கால போராட்டம் அமைதிக்கு வழிவகுக்க,
சில சமயங்களில் அது அமைதியான ஓய்வாக முடிவடையும்;
சில கதைகள் மறைக்கப்பட சில நுழைவுகள் தடை செய்யப்பட சில வாயில்கள் மூடப்பட சில வழிகள் தடுக்கப்பட மர்மங்கள் ஒரு அற்புதமான சக்தியுடன் திறக்கப்படுகின்றன;
எதையும் உண்மையாக்கும் ஆற்றல் கற்பனைக்கு உண்டு அதன் மூலம் நம் சொந்த உலகை உருவாக்கி அதில் மகழிச்சி காண வா!!
.
