என் மனங்கோணாமல் இரு
என் மனங்கோணாமல் இரு
என் ஆர்வங்கள் எல்லாமும் உனக்கும் பிடித்ததாய் சொல்லிக் கொண்டிருந்தாய்..
நான் சந்தேகிக்கும் போதெல்லாம் சிலவற்றை செய்தும் காட்டினாய்..
ஆஹா என் எண்ண ஓட்டப்படியே சிந்திக்கும் நீ கிடைக்க எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்..!!
தயங்காமல் என் காதலைச் சொன்னேன்..
சீ..நானொன்றும் அப்படியில்லை..உன் மனங்கோணாமல் இருக்கவே அவ்வாறு இருந்தேனென்றாய்..
அப்படியா..சரி பரவாயில்லை..முன் போல் என் ஆர்வப்படியே மட்டும் நீ நடந்துகொள்.
அப்பட்டியலில் காதல் என புதிதாய் ஒன்றை இணைத்திருக்கிறேன்..சீக்கிரம் போய் என் மனங்கோணமல் நடக்க உன்னை தயார் படுத்திக்கொள், போ..!