ஏதோ ஓர் முற்றத்து மழையில்
ஏதோ ஓர் முற்றத்து மழையில்
தோதுபட்ட பொந்தாதனால்களிக்குது அணில்குஞ்சுஉள்ளேயும் வெளியேயும்வாலைத் துருத்திக்கொண்டுசிதறிய பழவிதையோகாய்ந்து கிடக்குதுமண்கூட்டிப் பெருக்கியஈச்சந் துடப்பதருகினில்வாட்டாமில்லா மூலையில்வயோதிகம் எய்திவெண்தாடி ஒட்டடை உயிர் ஊசலாடுது சோம்பேறிச் சிலந்தியொன்று வலைபின்னா மகிழ்வில் ஒய்யாரமாய்த் தூங்குது கிழட்டுத் தாடியில் ஊமைக் குருவியொன்று எச்சமிட்டுத் தரையை(அலங்) கோலமாக்கிக் கூரையில் பதுங்குதுயாரோ கூட்டைக்கலைத்தும் கீச்சிடாமல்முட்டையை விட்டுவிட்டு வீதியில் பறக்குதுஅவ்வீட்டின் தனிமையில் துழாவி அன்று பதிவிட்டாள் முகநூலில்காதல் கவிதையைகண்சதை படர்ந்த கிழவி ஏதோ ஓர்முற்றத்து மழையின்சத்தத்தில் பதறிஅவனெழுந்து படிப்பானோநள்ளிரவில்பொக்கைவாய் குழறி!