ஈழத்து ஈரம்
ஈழத்து ஈரம்
மரணம் உறையச்செய்யும்
என்பதை அதைத்
தடவிப் பார்த்துதான்
கற்றுக்கொள்ள முடிந்தது
அவர்களுக்கு
அண்டார்ட்டிக்கா ஏன்
செவ்வாயிலும் கூட
உலாவ அனுப்பினார்கள்
தன்மான மனங்களை
அங்கேயும் ஒரு மூலையில்
மனித வாசம்
அம்மனங்களை அம்மணமாக்கி
மணத்துக்கொண்டிருந்தது.
அவர்கள்ரணங்களைப் பிளந்து
ரத்தம் குடித்தே
பசி அடக்க
ின
சிலமலக் கிடங்குகள்.
ரணங்களுக்கு மருந்து
போட மறந்து
போன பயம்
மரத்தும் போனதால்!
செம்மண்ணைக் குழப்பி
மூஞ்சியில் அப்பிக் கொள்ளும்
ஒர் விளையாட்டை
தாய் மார்பில்
பால் குடித்தறியா
அப்பிள்ளைகள் பங்கருக்குள்
விளையாடிக் கொண்டன
பசியடைத்த அப்பிள்ளைகள்
செவியில் பீரங்கிச் சத்தம்
கேட்கவேயில்லை!