சுயத்தின் மயக்கம்
சுயத்தின் மயக்கம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
வானம் வெறித்து
கண்கள் பூத்து
புகையும் சிகரெட்டுடன்
நின்றிருந்தான் அவன்
பெருவெளியின் அதிசயத்தில்
பச்சை போர்த்திய வயலும்
நீண்டு பரந்த நெடுஞ்சாலையும்
பனியின் அடர் குளிரும்
காரிநாளின் கொடும் இருளும்
ஊரின் பேரமைதியும்
வாகனங்களின் பேரிரைச்சலும்
பேசாது தனிமையுணர்த்தின
இந்நேரத்தில் வாயு நிறைந்த
மதுக்குப்பி திறந்ததும்
எண்ணங்களின் எரிமலைபோல்
ஏடாகூடமாய் பொங்கியது
சிறுதுளி வீணாகாது
சுற்றி நாவினால் நக்கி
உள்ளிளுத்தான் சொர்க்கத்தின் உச்சத்தில்
மதனம் நிறைந்த மதுவுண்டு
மனவெளியின் மயான அமைதியில்
தொலைத்த சுயத்தை
தட்டுத்தடுமாறி தேடுகிறான் மயக்கத்தில்.