சினம் மறந்த நாணம்
சினம் மறந்த நாணம்
நான் உன்னோடு
ஊடல் கொண்டு
சினத்தில் இருக்க...
நீயோ அதை
பொருட்படுத்தாமல்
என் முகத்தை கண்டு
நீ கண் அடிக்க...
அதில் என் சினம் மறந்து...
நாணம் எனை
தொற்றிக் கொள்ள....
வேறு வழி ஏதும் இல்லாமல்
என்னவனின் நெஞ்சத்தில்
தஞ்சம் புகுந்தேன்...