STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

1 min
352

செய்யும் தொழிலே தெய்வம்!

அதில் திறமை தான் நம் செல்வம்! 

பெருந்தொற்றுக்காலத்தில்

மருத்துவர், செவிலியர், 

முன்களப்பணியாளர்,

காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள்,

எரிவாயு உருளை, பால், பத்திரிகை, கடிதம், 

காய், பழம், அரிசி, பருப்பு, எண்ணெய் 

என நம் வீடு தேடித்தருபவர்கள்,

நகரத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளிகள்,

முதியோருக்கும், முடியாதோருக்கும்,

கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும்

உணவளிக்கும் தன்னார்வலர்கள்,

என விடாமல் தொழில் மற்றும் சேவை செய்து 

மக்களைக் காப்பதால் அவர்கள் 

நாம் காணும் மனித வடிவிலான தெய்வங்கள்.

அந்த தெய்வத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு

சமூக இடைவெளி பேணி முகக்கவசம் அணிந்து

கைகளை அடிக்கடி கழுவி வீட்டிலேயே இருப்பது தான்!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational