அன்னையின் காதல்
அன்னையின் காதல்
என் வாழ்வின் ஆதாரம் நீயே என் அன்பு மகனே,
உன்னால் தானே என்னக்கு இவ்வுலகில் உயர்வு,
நீ இன்றி ஒரு நாளும் எனக்கு இன்றியமையாதது.
என் கனவின் மறு உருவம் நீயே என் வாழ்வின் ஒளியே,
உன்னால் எனக்கு மகிழ்ச்சி மட்டுமே ஒவ்வொரு தினமும்,
நீ இல்லாத வாழ்வை எண்ணிகூட பார்க்க முடியவில்லை.
என் துயரங்கள் துடைக்கும் துணை நீயே என் உயிரே,
உன்னை விட எனக்கு துணையாக இருக்க வேறு ஒருவர் இங்கு இல்லை,
நீ மட்டும் என்னுடன் இருந்தால் போதும் இவ்வுலகை வென்றுவிடுவேன் நான்.
என் எண்ணத்தின் மறு உருவம் நீயே,
உன்னை செயல்கள் அனைத்து என் எண்ணம் போல இருபது ஆச்சர்யம்,
நீ ஒரு குழந்தை என்ற போதும் பல அறிவுரைகளை எனக்கு நீ வழங்குவது உண்டு.
என் வாழ்க்கை பயணத்தில் இனி எந்த கவலையும் இல்லை,
நீ ஒருவன் உன் அன்னை எனக்கு துணை நின்றால் போதும்,
உன் அன்பே என்னை சாதிக்க வைக்கும்,
ஒரு அன்னையின் காதல் மட்டுமே இவ்வுலகில் உயர்ந்தது,
அன்னையின் காதலை உணரும் குழந்தை வாழ்க்கையில் உயர்வது நிச்சயம்.