அம்மா
அம்மா
என் அம்மா....
சூரியனையே எழுப்பிடுவாள் என் அம்மா !
சுறுசுறுப்பாய் வேலை செய்வாள் என் அம்மா! வேலைக்காரி அறிந்ததில்லை; அரவை இயந்திரம் கண்டதில்லை; வாஷிங் மெஷின் அவள் அறியாள்; ஆனாலும்.. சுறுசுறுப்பாய் வேலை செய்வாள் என் அம்மா !
பத்து மக்களைப் பெற்ற மகராசி என் அம்மா !
சிறந்த பெற்றோர் என பட்டம் பெற்றவள் என் அம்மா !
அறுசுவை சமைத்திடுவாள் என் அம்மா
ஆனாலும் அவள் உண்டு பார்த்ததில்லை எங்களுடன் !
கை நாட்டு என தந்தை நொந்து சொல்ல ,
ஐம்பது வயதிலும் கையெழுத்துப் போட
கற்றுக் கொண்டாள் என் அம்மா!
பேரன் பேத்தி என கண்ட பின்னும்
அயராது தன் வேலையைத்
தானே செய்து முடிப்பாள் என் அம்மா!
வீடு நிறைய தன் குடும்பம்
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்திடவே
விரதங்கள் இருந்திடுவாள்;
விரயங்கள் அவள் அறியாள்!
அடுத்த ஜென்மத்திலும் வர வேண்டும் என் அம்மா!
