யார் பொறுப்பு
யார் பொறுப்பு
ஏய் மனிதா இனியாவது விழித்திடு
போதும் உறக்கம் கண் விழித்திடு
உனக்கு நான் என்ன வெல்லாம் தந்தேன்
அழகான பூமி
சலசலவென்று ஓடும் நதிகள்
செல்வ வளம் பெற்ற கடல்கள், காடுகள், மலைகள், அருவிகள்,., சோலைகள், என்னவெல்லாம் தந்தேன் சிறப்புற,
துளியாவது என்னை மதித்தாயா
இயற்கையை நீ ஏன் மதிக்கவில்லை
இயற்கையை நீ ஏன் மதிக்கவில்லை
மனிதா கடவுள் படைத்த இயற்கை
இன்று குரானா குரானா என்று குதிக்கின்றாய் குமுறு கின்றாய் கொதிக் கின்றாய்
என்ன பயன்?
எங்கிருந்து வந்தது குரானா?
நீ பூமியை எங்கனம் மாசுபடுத்தி விட்டாய்?
நினைத்துப் பார்
வண்ண வண்ணமாய் காய்கறிகள்
விதம் விதமாய் சுவையாய் கனிகள்
கண்குளிர வண்ண வண்ண மலர்கள்
வண்ணச் சரமாய் மலர் கொத்துகள்
பசும் தோட்டங்கள், பண்ணைகள்,பண்ணை காடுகள்,
நடப்பன ஊர்வன பறப்பன என்று விதம்
விதமாய் விலங்குகள், மற்றும் தாவரங்கள்,
மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், புகைமூட்டம், காடழிப்பு, காட்டுத்தீ,
புவி வெப்பமடைதல், அமில மழை, காற்று மாசுபாடு,
நகர்ப்புற விரிவாக்கம், கழிவுகளை சேர்த்து விடுவது,
ஓசோன் அடுக்கு குறைவு, நீர் மாசுபாடு, காலநிலை மாற்றம்
ஆகியவை நாம் இப்போது எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சில மட்டுமே. சுற்றுச்சூழலின் மாசு மற்றும் சீரழிவு.
சுத்தமான நீர் ஆதாரங்களை நாம் மாசுபடுத்தினால், நுகர்வுக்கு குறைந்த தூய்மையான நீர் நம்மிடம் இருக்கும் என்று அர்த்தம். ...
.
இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனித, விலங்கு மற்றும் தேசத்தையும் பாதிக்கின்றதே?
வாழ்க்கையைத் தக்கவைக்க நமக்கு உணவும் நீரும் அளிக்கிறதே?இயற்கை
நம்முடைய நல்வாழ்வு இந்த கிரகத்தை மட்டுமே சார்ந்துள்ளதே?
இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
எங்கும் மாசு,, எதிலும் மாசு, ஆனால் உனக்கு எல்லாம் தூசு.,