anuradha nazeer

Tragedy

4.6  

anuradha nazeer

Tragedy

வீட்டு வேலை செய்யும் பெண்

வீட்டு வேலை செய்யும் பெண்

2 mins
12.3K



சில நிமிடங்கள் அமைதிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தவர், "ஏற்கெனவே வேலை செஞ்ச இடங்களில் ரெண்டு நாளைக்கு ஒரு முறை போன் பண்ணி எப்போ வேலைக்கு வரட்டும்னு கேட்டுட்டுதான் இருக்கேன். கொரோனா முடியட்டும்னு சொல்லிட்டாங்க. இதுக்கு எப்போ விடிவு காலம் பொறக்கும்னு தெரியல. ரேஷன்ல கொடுக்குற பொருள்கள் போதுமானதாக இல்ல. கடன் கேட்டா கூட யாரும் தரமாட்றாங்க. நிலைமை சீக்கிரம் சரியாகணும் தாயி" என விடைபெறும் தேன்மொழி அக்காவைத் தொடர்ந்து பத்து வருடங்களாக வீடுகளில் சமையல் வேலைசெய்து வரும் சீதா அக்காவிடம் பேசினோம்.


’’ரெண்டு வீட்டில வேலை செய்துட்டு இருந்தேன்ம்மா. மாசம் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். கொரோனா பரவ ஆரம்பிச்சதுமே படிக்கிறதுக்காக இங்க தங்கியிருந்த பசங்க கிளம்பி ஊருக்குப் போயிருச்சுங்க. அதனால் வேலையில்ல. இன்னொரு வீட்டில் என் மூலமா அவங்களுக்குக் கொரோனா வந்துரும்னு வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க வூட்டுக்காரரு கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அவருக்கும் வேலையில்லைங்கிறதால் குடும்பத்தைச் சமாளிக்கவே சிரமமாக இருக்கு.

Also Read"வீட்டுவேலை செய்றவங்கன்னா அவ்ளோ ஏளனமா?" அரசு நிர்ணயித்த ஊதியம் நியாயமானதா?

ரெண்டு பிள்ளைகளை வெச்சுக்கிட்டு வாடகை கொடுக்கவும் வழியில்லாமல், சாப்பாட்டுக்கும் காசில்லாமல் உட்கார்ந்து இருக்கோம். எத்தினி மாசத்துக்கு வாடகையைத் தள்ளிப் போட முடியும்? எப்போனாலும் நாங்கதான அந்தக் காசை மொத்தமாக கொடுக்கணும்... அப்போ அவ்வளவு பெரிய தொகைக்கு எங்க போறதும்மா... படிச்சுருந்தா சமையல் தவிர வேற வேலைக்குப் போகலாம். படிப்பும் இல்லாததால் வீட்டில் முடங்கி இருக்கோம். விலைவாசி எல்லாம் கூடிப்போச்சு... அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் எத்தனை நாளைக்கு வரும். உண்மையைச் சொல்லணும்னா கையில் அம்பது ரூபா கூட இல்ல. ஆனாலும் நிலைமை சரியாகிரும்னு காத்துட்டு இருக்கோம். கொரோனா ஊரடங்கு முடிஞ்சாகூட மக்கள் மனசுக்குள்ள இருக்க பயம் போனாதான் எங்களுக்கு வேலை கிடைக்கும். அந்த நாள் சீக்கிரம் வரட்டும்" என விடைபெறுகிறார் சீதா அக்கா.

அவரைத் தொடர்ந்து 18 வருடங்களாக வீட்டு வேலை செய்து வரும் குளோரி அக்காவிடம் பேசினோம். "என்னத்தம்மா சொல்ல. 18 வருசமா வீட்டு வேலை செய்துட்டு இருக்கேன். ஒரு நாள் கூட உடம்பு சரியில்லைனு வீட்டில் இருந்தது இல்ல. 18 வருசம் கழிச்சு இப்போதான் மூணு மாசம் தொடர்ந்து வீட்டில் இருக்கிறேன். முன்னாடியெல்லாம் வீட்டில் வேலை பார்க்கிறவங்களை வீட்டில் ஒருத்தராகப் பார்க்க மாட்டாங்க. இப்போதான் அந்த மனநிலை மாறியிருக்கு. ஆனால் இப்போ இந்தக் கொரோனா வந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துட்டோம். மக்கள் இனி எங்களை தள்ளிவெச்சுதான் பார்ப்பாங்க.


உண்மையைச் சொல்லணும்னா கொரோனா எங்களோட வாழ்க்கையையே திருப்பிப் போட்டுட்டுப் போயிருச்சு. நாங்க காசு பணமெல்லாம் எடுக்க மாட்டோம்னு எங்களை நம்பி வீட்டுக்குள்ளவிட்டவங்க கூட, இப்போ கொரோனா பரவிரும்னு வீட்டுக்குள் விடமாட்றாங்க. நான் ஆறு வீட்டில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலை இருக்கும்... மாசம் 20,000 ரூபாய்க்கு மேல கிடைக்கும். இந்த ஊரடங்கு அறிவிச்சதால் வருமானமே இல்லாம போயிருச்சு. வீட்டில் இருக்கிறதை வச்சு சமாளிச்சுட்டு இருக்கோம். படிக்கலைனாலும் மாசம் 15,000 ரூபாய் வீட்டுக்குக் கொடுத்தாதான் எங்க குடும்பத்துல எங்கள மதிச்சுட்டு இருந்தாங்க. இப்போ அந்த மரியாதையை இழந்துட்டோம். எங்களுக்குனு எந்த அடையாள அட்டையும் இல்லாததால் அரசுடைய உதவியும் கிடைக்காதுனு சொல்றாங்க. ஆனாலும் அரசாங்கத்தை நம்புகிறதைத் தவிர வேறவழியில்ல... உதவி பண்ணுங்க சாமீ" என கைகூப்பி விடைபெறுகிறார்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy