Arul Prakash

Thriller

3  

Arul Prakash

Thriller

தற்(கொலை)யா

தற்(கொலை)யா

6 mins
630



கிருஷ்ணா, இவர் ஒரு பிஸ்னஸ் மேன். இவர் வயசு 62.


கிருஷ்ணா ஒரு ரவுடிய பாக்க போறான்.அந்த ரவுடி பேரு குமாரு. அவரோட வீட்டுக்கு கிருஷ்ணா போறான்.


கிருஷ்ணா to சப்ப : சார் என் பேரு கிருஷ்ணா, நான் குமார் சார பாக்கணும்.


சப்ப : என் பேரு சப்ப,அவரு பூஜைல இருக்காரு, நீங்க வெயிட் பண்ணுங்க.


கிருஷ்ணா: சரி சார்.


10 நிமிஷம் கழிச்சு


சப்ப to கிருஷ்ணா : குமார் அண்ணா வர லேட் ஆகும் போல தெரியுது, நம்ம எதாவது பேசுவோமே.


கிருஷ்ணா : பேசலாம் சார், உங்க பெயரே சப்ப தானா.


சப்ப : நாட்டுல எவ்ளோ பேசுறதுக்கு இருக்குது, உங்களுக்கு என் பெயர் காரணம் தான் தெரிஞ்சுக்குனுமா. சரி என் பேரு கேட்டவுடனே,நான் எந்த மாதிரி ஆளா இருப்பேன்னு தோணுது.


கிருஷ்ணா : நீங்க ஒரு உதவாகர, தண்டம், ஒண்ணுத்துக்கும் ஆகாதவன்.


சப்ப : போதும் போதும், நீங்க சரியா தான் சொல்லி இருக்கீங்க, நான் ஒரு உதவாகர தான். அதனால என்னை எல்லாரும் சப்பனு தான் கூப்பிடுவாங்க.


கிருஷ்ணா : நீங்க குமார் சார்க்கு என்ன வேணும், அடி ஆளா நீங்க.


சப்ப : குமாரோட தம்பி நான். அடி ஆள்னு சொல்ல முடியாது, இந்த கும்பல்ல இருக்க ஒரு எடுபுடினு சொல்லலாம். எப்பவும் எங்க அண்ண கூட தான் இருப்பேன்.


கிருஷ்ணா : ஓ சரி, குமார் சார் எப்ப வருவாரு.


சப்ப : இப்ப என்ன விஷயமா வந்து இருக்கீங்க.


கிருஷ்ணா : நான் அவர் கிட்ட தான் சொல்லணும்.


சப்ப : சரி சார். எப்படியும் நீங்க விஷயத்தை சொல்லும் போதும்,நான் எங்க அண்ணன் கூட தான் இருக்க போறேன், அப்படியே தெரிஞ்சிக்கிறேன்.


பேசிட்டு இருக்கும் போது குமார் வந்துடுறாரு.


குமார் to கிருஷ்ணா : சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணும்.


கிருஷ்ணா : சார் எனக்கு 50 லட்சம் கடன் இருக்கு.


குமார் : சார் இங்க கடன் லாம் கொடுக்கறது இல்ல.


கிருஷ்ணா : சார் அதுக்காக வரல, ஒருத்தர கொள்ளணும்.


குமார் : யாரை கொள்ளணும்.


கிருஷ்ணா: என்னை தான்.


குமார் : உனக்கு என்ன பைத்தியமா, நீயே உன்ன கொள்ள காசு தர.


கிருஷ்ணா : சார் எனக்கு, ரொம்ப கடன் இருக்கு. நல்லா தான் வாழுந்தேன், ஆனா இப்ப கொஞ்சம் கடன் ஆகிடிச்சி. சாகலாம்னு பாத்து தூக்கு போட்டா 20 நிமிஷம் ஆகுமாம் சாவத்துக்கு , விஷம் குடிக்கிலாம்னு பாத்தாகா, அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகும்.


குமார்: அதுக்கு.


கிருஷ்ணா : உங்ககிட்ட சொன்னா ஒரே வெட்டுல என்ன கொன்னுடிவிங்கள, அது தான் உன்கிட்ட வந்தேன். ஒரு நொடியில் செத்துடுனும்.


குமார் : சரி சாகணும்னும் முடிவு எடுத்துட்ட, நான் ஏன் தடுக்க போறேன், அதுவும் எனக்கு பணம் வரும் போது. பணத்தை இப்பவே கொடுத்துட்டு போய்டு.


கிருஷ்ணா: சரி சார்.


குமார் : சரி எங்க உன்ன சம்பவம் பண்றது. உங்க வீட்ல.


கிருஷ்ணா : வீட்ல வேணாம் சார், என் பொண்டாட்டி இருப்பா. எங்கனா காலியானா ரோட்டுல வச்சிகுலமே.


குமார் : சரி பரக்ஸ் ரோடுக்கு வந்துரு அங்க ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கும். எந்த டைம்.


கிருஷ்ணா : நாளைக்கு டைம் 6 to 7. ஒரு மணி நேரத்துல எப்ப வேணா வெட்டிக்கோங்க. சரியா வெற்ற நேரம் தெரிஞ்ச பயமா இருக்கும், அதனால தான் 1 மணி நேரம் சொன்னேன் 


குமார் : சரி யா. முடிச்சிடலாம் விடு.


கிருஷ்ணா : நீங்க தான வெட்ட வருவீங்க.


குமார் : நான் வருவேன்,இல்லனா, என் பையன் சிவா வருவான்.


கிருஷ்ணா: ஓகே சார்.


------------------அடுத்த நாள் ------


குமார், அவரால் போக முடியலன்னு, அவர் பையன் சிவாவ, கிருஷ்ணாவ கொல்ல அனுப்புறான்.


கிருஷ்ணா அந்த காலியான ரோட்டுக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான்.


கிருஷ்ணாக்கு ஒரு போன் வருது.போன் எடுத்து பேசுறாரு.


கிருஷ்ணா : ஹலோ யார் பேசுறது.


ராமு : டேய் நான் ராமு பேசுறேன் டா.


கிருஷ்ணா : என்ன விஷயம் சொல்லு.


ராமு : 5 வருஷம் முன்னாடி உன் கிட்ட 2 கோடி கடன் வாங்கி ஊரை விட்டு ஓடி போய்ட்டேன்ல , அதை இப்ப திருப்பி தரலாம்னு இருக்கேன்.


கிருஷ்ணா முகத்துல அனந்த தாண்டவம்.


கிருஷ்ணா : டேய் ரொம்ப நன்றி டா. இப்ப நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் டா. 


ராமு : நீ கஷ்டத்துல இருக்கன்னு தெரியும் டா, அதுனால தான் காச திருப்பி கொடுக்கணும் நினைச்சேன்.


கிருஷ்ணா: நன்றி டா.


கிருஷ்ணா சந்தோஷத்துல இருக்காரு, உடனே குமார் தன்ன வெட்ட போறாருனு ஞாபகம் வருது, உடனே வியர்வை கொட்டுது பயத்துல.


குமார்க்கு போன் பண்ணி, என்ன வெட்ட வராதீங்கனு சொல்ல கால் பன்றாரு கிருஷ்ணா , உடனே ஒரு கத்தி அவர் கழுத்து கிட்ட வருது, கிருஷ்ணா நகர்ந்து போயிடுறாரு, அந்த கத்தி வேறு ஒரு ஆள் பைக்ல வந்தவரு கையை கிழிச்சிட்டு போயிடுது. குமார் பையன் கத்தி எடுத்துட்டு உடனே அந்த இடத்தை விட்டு போயிடுறாரு.


அடுத்த நாள் போலீஸ் ரவுடி குமார் வீட்டுக்கு போய் இருக்காங்க. சிவா வெட்டுனது ஒரு வீடியோ ஆதாரமா போலீஸ்க்கு கிடைச்சுச்சு, அத வச்சி குமார் பையன் சிவாவ போலீஸ் கைது பண்ணிடுறாங்க.


கோர்ட்ல சிவாவ ஆஜர் பன்றாங்க, கத்தி வச்சி ரோட்ல வன்முறை பண்ணதுக்காக ஜெயில்ல புடிச்சு போட்டுறாங்க.


குமார் வீட்டுல, குமார், அவர் தம்பி சப்ப, அவரோட வலது கைன்னு சொல்லப்படும் ரகு இருக்காரு.


குமார் to ரகு : நான் தான் நீதிமன்றத்துக்கு வரமுடில, அங்க என்ன தான் ஆச்சு.


ரகு : சிவாக்கு எதிரா சாட்சியும் ஆதாரமும் திரும்பிடிச்சு, ஜெயில்ல புடிச்சி போட்டுட்டாங்க.


குமார் : எவன் சாட்சி சொன்னது.


ரகு : ஒருத்தன் பேரு விக்கி, அந்த சம்பவம் நடக்கும் போது tiktok வீடியோ பண்ணிட்டு இருந்தான் போல, சிவா வெட்டுனது பதிவு ஆகிடுச்சு, அது ஆதாரம் ஆகிடுச்சு, அவன் சாட்சி ஆகிட்டான்.


குமார் : சரி அந்த கிருஷ்ணானு ஒருத்தன் தன்ன தானே வெட்ட சொல்லி கேட்டான்னு சிவா, ஜட்ஜ் கிட்ட சொன்னானா.


ரகு : கிருஷ்ணாவ ஜட்ஜ் விசாரிச்சாரு, ஆனா கிருஷ்ணா சிவாவ யாருனு தெரியாது இவங்க சொல்றது எல்லாம் பொய்னு சொல்லிட்டான்.


குமார் : அப்டியா சொன்னான், அந்த கிருஷ்ணாவ புடிச்சி என் கண்ணு முன்னாடி கொண்டு வாங்க டா, அவனை என் கையால கொல்லனும்.


ரகு: அண்ணா


குமார்: சொல்லு டா.


ரகு : எனக்கு என்னமோ எவனோ நம்மள ஜெயில்ல போடணும்னு பிளான் பண்ணி, பண்ணி இருக்கானு தோணுது அண்ணா.


குமார்: என்ன டா சொல்ற.


ரகு : கிருஷ்ணா பாருங்க, அவனையே கொல்ல சொல்லி அவனே வந்தான், அப்பறம் அந்த சம்பவம் நடக்க வேண்டிய இடுத்துல ஒருத்தன் எதர்ச்சியா எப்படி வீடியோ எடுப்பான்.


குமார் : இது பிளான் மாதிரி தான் தெரியுது. நீ அந்த கிருஷ்ணாவையும், அந்த வீடியோ எடுத்த பையன் விக்கியையும் புடிச்சு கொண்டு வா, எவன் இந்த பிளான் போட்டான்னு கண்டுபிடிச்சே ஆகணும்.


-----------அடுத்த நாள் --------


ரகு to குமார் : அண்ணா, அந்த வீடியோ எடுத்த பையன் விக்கி யாரோ கொன்னுட்டாங்க.


குமார்: என்ன டா சொல்ற.


ரகு : ஆமா அண்ணா . எவனோ பிளான் பண்ணி நம்ம ஜெயில்ல போடணும்னு பண்ண வேலை தான் முடிவு ஆகிடிச்சு.


குமார் : எப்படி டா சொல்ற.


ரகு : நம்ம விக்கியா புடிச்சா, யார் பண்ணது இந்த வேலையன்னு , அவன் வாயாலவே சொல்ல வெச்சிடுவோம்னு, அந்த பையன கொன்னுட்டாங்க.


குமார் : சரி டா அப்போ யார் அந்த பையன கொன்னதுனு, நமக்கு தெரிஞ்ச ரவுடிங்க சொல்லி யாருனு கண்டுபுடி.


ரகு : சரி அண்ணா. நம்ம பசங்கள அனுப்பி இப்பவே கண்டுபிடிக்க சொல்லுறேன்.


குமார் : அப்படியே அந்த கிருஷ்ணாவ புடிங்க, அவன புடிச்சாலும் நமக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சுடும்.


---------அடுத்த நாள் -----


ரகு to குமார் : கிருஷ்ணாவ புடிச்சிட்டோம் அண்ணா. அவனும் அவன் பேரனும் மாட்டிக்கிட்டாங்க. ஒண்ணா பைக் சுத்திட்டு இருந்தாங்க தூக்கிட்டோம்.


குமார் : சூப்பர் டா கூட்டிட்டு வாங்க டா செல்லங்கள


கிருஷ்ணாவையும், அவர் பேரனையும் (வயசு 8) முட்டி போட வச்சி குமார் பேசிட்டு இருக்காரு.


குமாரு to கிருஷ்ணா : ஏன்டா நானா உன்ன வெட்ட வந்தன்.


கிருஷ்ணா : இல்ல சார், நான் தான் உங்கள வெட்ட சொல்லி கேட்டன்.


குமார் : அப்பறம் ஏன்டா கோர்ட்ல எங்கள யார்னு தெரியாதுனு சொன்ன.


கிருஷ்ணா : சார் திடிர்னு எனக்கு சேர வேண்டிய பணம் கிடைச்சிடுச்சு, நான் சாக வேண்டிய கட்டாயம் இல்ல, அதுனால வெட்ட வரும்போது நகர்ந்துடேன். அப்பறம் கோர்ட்ல நானே என்ன வெட்ட காசு கொடுத்தேன்னு சொன்னா என்ன பைத்தியம்னு சொல்லுவாங்கனு, நீங்க யார்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.


குமார் : டேய் நீ பொய் சொல்ற, என்ன ஜெயில்ல போடறதுக்காக எவனோ, உன்ன வச்சி என்ன அடிக்க பாத்து இருக்கான். நாளைக்கு காலைல வரைக்கும் உனக்கு டைம், யார் உன்ன இது மாதிரி செய்ய சொன்னான்னு சொல்லிடு, அது வரைக்கும் நீயும் உன் பேரனும் இங்க தான் இருக்க போறீங்க.


-----------அடுத்த நாள் ---------


ரகு to குமார் : அண்ணா நம்ம பசங்க, ரவுடி காஜா ஆள் ஒருத்தன போட்டுடாங்க.


குமார் : அதுக்கு என்ன இப்போ.


ரகு : காஜா ரொம்ப கோபமா இருக்கான், நம்ம ஆளுங்க ஒருத்தன கேட்கறாங்க. ஒருத்தன வெட்டி கொன்னா தான் இந்த பிரச்சனை முடியும்னு சொல்ராங்க, இல்லனா gang war ஆகிடுமாம் .


குமார் : இப்போதைக்கு யார்கிட்டயும் சண்டை வேணாம், நம்ம ஆள் ஒருத்தன குடுத்துடு


ரகு : யாரை அண்ணா கொடுக்குறது.


குமார் : சப்பைய கொடுத்துடு.


ரகு: அவர் உங்க தம்பி.


குமார் : நாய் சும்மா சாப்பிட்டு இங்க சுத்திட்டு இருக்கு. போட்டு தள்ளட்டும் விடு. இன்னைக்கு சாயங்காலம் இந்த வேலைய முடிச்சிடுங்க 


ரகு: சரி அண்ணா.


குமார் : சப்பைய இன்னைக்கு மரியாதை கொடுங்க டா, அவன் என்ன கேட்டாலும் வாங்கி கொடுங்க, கடைசி நாள்.


ரகு: சரி அண்ணா.


குமார் இப்ப கிருஷ்ணா கிட்ட பேச போறான். கிருஷ்ணாவும் அவன் பேரனும் முட்டி போட்டுட்டு இருக்காங்க. பக்கத்துல சப்பயும், ரகுவும் இருக்காங்க.


குமார் to சப்ப : ஏன் பா நிக்குற உட்காரு பா.


சப்ப : இல்ல அண்ணா நிக்குறேன்.


குமார் : நம்ம எவ்ளோ நாள் வாழ போறோம், எதுக்கு இந்த மரியாதைலாம்.


சப்ப: இருக்கட்டும் நா.


குமார் to கிருஷ்ணா : நீயா உண்மைய சொல்லிடு, இல்ல உன்ன கொன்னுடுவேன்.


கிருஷ்ணா : என்னங்க கொன்னுடுவேன் கொன்னுடுவேன்னு பயம் புருத்துறீங்க, என்ன கொல்லுங்க.


குமார் : ஓ,நீ சாவரத்துல, உனக்கு பயம் இல்லையா, உன் பேரனை கொல்லுறேன்.


குமார் கத்தி எடுத்து அந்த குழந்தை கழுத்துல வச்சி அழுத்துறான். கிருஷ்ணா, குமார் கால்ல விழுந்து விட்ர சொல்லி அழுகுறான். அப்போ குமரோட போன் அடிக்குது.


குமார் to ரகு : டேய் கழுத்துல கத்தி வச்சி இருக்கேன்ல, போன் எடுத்து speakerல போட்டு நீட்டு.


குமார் அந்த குழந்தை கழுத்துல கத்தி வச்சிட்டே போன் பேசுறான்.


குமார்: ஹலோ யாரு.


யுகா : நான் யுகா பேசுறேன், அந்த வீடியோ எடுத்தானே விக்கி, அவன் யார் கொலை பண்ண சொன்னதுனு கண்டுபிடிக்க சொன்னிங்கள.


குமார் : கண்டுபிடிச்சிட்டியா.யாரு 


யுகா : உங்க தம்பி சப்ப தான் அண்ணா .


அந்த குழந்தை மேல இருந்த கத்திய எடுத்துட்டு, சப்பைய திரும்பி பாக்குறான். சப்ப,பக்கத்துல இருந்த துப்பாக்கிய எடுத்து குமார் கைலயே சுட்டுடுறான். ரகுவையும் கால்ல சுட்டுடுறான்.


இப்ப போய் chairல உட்காருறான்.


சப்ப to கிருஷ்ணா : நீ இங்க இருந்து ஓடி போய்டு.


குமார் வலில துடிச்சிட்டு இருக்கான்.


குமார் to சப்ப : டேய் நீ தான் என்ன ஜெயில்ல புடிச்சு போட, இந்த கிருஷ்ணா வச்சி இப்படி பண்ணியா.


சப்ப : கிருஷ்ணாவ நான் வைக்கல, அந்த வீடியோ எடுத்த பையன் விக்கிய தான் நான் வச்சி வீடியோ எடுக்க சொன்னேன் . நான் உன்ன ஜெயில்ல போடணும்னு இந்த வேலைய பண்ணேன், ஆனா உன் பையன் மாட்டிக்கிட்டான்.


குமார் : ஏன் டா இப்படி பண்ண.


சப்ப : என்ன சப்பனு முத்திரை குத்துணல, இந்த சப்பையால என்ன பண்ண முடியும்னு காட்ட தான். ரவுடி காஜா கிட்ட என் போட சொல்லி கொடுத்துடலாம்னு பிளான் பண்ணியே, ரொம்ப நல்லவன் டா நீ.


குமார், ரகு ரெண்டு பேரையும் சப்ப போட்டு தள்ளிட்டான்.


குமார் பையன் சிவாவையும் ஜெயில்ல ஆள் வச்சி போட்டு தள்ளிட்டு, சப்ப அந்த ஏரியால பெரிய ரவுடி ஆகிட்டான் 



Rate this content
Log in

Similar tamil story from Thriller