STORYMIRROR

Sowmiya Chemistry

Comedy Drama

3  

Sowmiya Chemistry

Comedy Drama

தேடலின் முடிவு நீயே

தேடலின் முடிவு நீயே

7 mins
413

  

     

   

                 சாலையில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒருவன் ( நிவாஷ் ) நம்ம இந்தியா எப்போமே வேற லெவல் மச்சான் . அதுவும் சொந்த ஊர்னா வாய்ல இருந்து வார்த்தையே வரலடா என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க தன் ப்ரண்டிடம் (கார்த்திக்) சொல்லிக் கொண்டிருந்தான் .ஆனால் கார்த்திக் இவன் சொல்வதை எதுவும் கண்டுக்காமல் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் .

                      என்ன இது , நம்ப எவ்வளோ நேரமா பேசிட்டே வரோம் இவன் எதுமே தெரியாத மாதிரி கார ஓட்டுறான் நிவா யோசிக்க ! அவன் சிரித்துவிட்டு தன் இரண்டு காதுகளில் வைத்திருந்த பஞ்சை எடுத்துவிட்டு ' மச்சான் எதாவது பேசன என்றான் கார்த்திக் '

                 அடப்பாவி , வாய் வழிக்க இவ்வளோ நேரம் ஒரு சின்ன பையன் பேசிட்டு வரேன் , நீ என்ன வார்த்தடா கேக்குற என்று சொல்லிக் கொண்டே அவனை அடிக்க , கார்த்திக் சிரித்துக் கொண்டே ஹே வேணாம் வீட்டுக்கு போய் நம்ப ப்ரச்சணைய வச்சிக்களாம் , இப்போ நான் ஸ்டேரிங்ல இருந்து கையை எடுத்தனா ரெண்டு பேரும் மர்கயா தான் ஓக்கேவா மச்சான் .

                     ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டே வர , திடிரென யாரோ ஒருவள் ( சஞ்ஜனா ) வேகமாக ஓடி வந்து இவர்களின் காரின் முன்னால் தன் கையை நீட்டியபடி நின்றாள் . மச்சான் ஏதோ ஒரு பொண்ணுடா நிவா வேகமாக சொல்ல ... சடன்ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான் .

               அவள் கீழே குனிந்து அங்கு இருந்த நாய் குட்டி ஒன்றை தூக்கி கொண்டு ' ச்சோ ஒன்னும் இல்ல சரியா என்று நாய் குட்டியை தடவிக் கொண்டே சொல்லிவிட்டு காரில் இருந்தவர்களை பார்க்க உள்ளே யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை காரணம் ப்லேக் மிரர் . இருந்தாலும் அவர்களை தனக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு திட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள் .

                  மச்சான் , சோ க்யூட் ஐ லைக் தட் கேர்ல் என்று கார்த்திக் சொல்ல . அடேய் அந்த பொண்ணு கேவலமா திட்டிட்டு போறா .. ஏதோ ஊம படம் பாத்த மாதிரி இருக்கு , உனக்கு க்யூட்டா போடா டேய் .. சீக்கிரம் கார எடு என்றான் . கார்த்திக் தன் காரின் கண்ணாடி வழியாக பார்க்க ' சஞ்ஜனா தன் சிகப்பு கலர் ஸ்கூட்டியில் ஏறி சென்றாள் . '

           

            இவன் சிரித்துவிட்டு , நிவாவை ஓரக்கண்ணால் பார்க்க , மச்சான் உன்னோட பார்வையோட அர்த்தம் எனக்கு புரியுது நல்லாவே ' இப்போ அந்த பொண்ண பாலோ பண்ண போறோம் அதானே தலையில் அடித்துக் கொண்டு நிவா கேட்க ! கரக்ட் மச்சான் நீ தான்டா உன்மையான ஃப்ரண்ட் ‌. சரிடா போ போ , அப்பறம் அந்த பொண்ணு கானாம போய்ட போகுது என்றான் .

 

                       பின் இருவரும் சஞ்ஜனாவை பாலோ செய்ய , அவள் நேராக ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே நுழைந்து தன்னுடைய யூனிப்ர்மை போட்டுக் கொண்டு , தனக்காக எடுத்துவைக்க பட்டிருந்த பீட்சா பாக்ஸ் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதனை டெலிவரி பண்ணுவதற்காக கிளம்பும் போது

' ஹே சஞ்ஜனா என்ன காலையிலே டென்சனா இருக்க , அவளது ஃப்ரண்ட் கேட்க ... அவள் புன்னகைத்த படி அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஓ காட் டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பனும் பாய் பாய் என்று அவளை ஹக் பண்ணிவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றாள் .

                மச்சான் அந்த பொண்ணு , என்னடா பீட்சா டெலிவரி பண்ண போறாங்க போல சிரித்துக் கொண்டே நிவா சொல்ல .. செம தான மச்சான் இப்படி ஒரு பொண்ணு தான் நான் இவ்வளோ நாளா தேட்டிட்டு இருந்தேன் ... கார்த்திக் சொல்ல ! பீட்சா ஃப்ரியா சாப்டவா மச்சான் நிவா கிண்டல் பண்ண ! அவன் நிவாவை முறைத்து விட்டு சஞ்ஜனாவை பாலோ பண்ண ஆரம்பித்தான் .

                   கடவுளே , அப்பவே எங்க அம்மா சொன்னாங்க , இவன் கூட ப்ரண்ட்ஷிப் வச்சிக்காதடா ன்னு , நான் தான் கேக்கல இன்னும் கொஞ்ச நேரத்தில நான் பைத்தியம் பிடிச்சு கீழ் பாக்கம் போய்டுவேன் போல என்று நிவா புலம்ப ! அப்படியா மச்சான் நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத உன்ன நானே கீழ்பாக்கம் கொண்டு போய் சேக்குறேன் !

               சொல்லுவடா சொல்லுவ , ஏற்போர்ட்ல இருந்து இறங்கி எவ்வளோ நேரம் ஆகுது , உங்க அம்மா வேற எனக்கு ஃபோன் போட்டுட்டு இருக்காங்க ! நீ இங்க ஏதோ ஒரு பொண்ணு பின்னால சுத்திட்டு இருக்க , பத்தாததுக்கு என்னையும் உன்கூட சேத்துக் கிட்ட ... இது எங்க போய் முடியுமே , என்றான் நிவா.

               மச்சான் நிறுத்துடா எனக்கு ரொம்ப தலை வழிக்குதுடா ஃப்லீஸ் நிவா ... என்றவன் தன் தலையில் ஒற்றை விரலை வைத்து தேய்த்தான் . கார்த்திக் யூ ஆல் ரைட் , சரி வா நம்ப வீட்டுக்கு போகலாம் , இதுதான் சமயம் என்று நிவா சொல்ல ! அவன் சிரித்துவிட்டு நோ சான்ஸ் மச்சான் இன்னைக்கு அந்த பொண்ணோட வீட்ட கண்டு பிடிக்காம இங்க இருந்து நான் எங்கயும் வரபோரது இல்ல ஓக்கே மச்சான் என்று அவனை பார்த்து கண் அடிக்க , நிவா தலையில் அடித்துக் கொண்டான் .

         நேரம் சென்று கொண்டே இருக்க , கடைசியில் சஞ்ஜனா தன் வேலைகளை முடித்துவிட்டு நேராக ஒரு கோவிலின் முன் சென்று தனது ஸ்கூட்டியை நிறுத்தினாள் . இங்கே , மச்சான் எங்கடா , உன்னோட ஆளு வீட்டை தவிற எல்லா இடத்தையும் சுத்தி காமிச்சிட்டாங்க ! சரி வாடா கோவிலுக்குள்ள போலாம் என்று கார்த்திக் சொல்லிக் கொண்டே சீட் பெல்டை கலட்ட , என்னது கோவிலுக்குள்ளவா .. மச்சான் நாலா கோவிலுக்குள்ள போனா அந்த சாமிக்கே அதிர்ச்சியில ஹார்ட் அட்டேக் வந்துரும் என்று நிவா சொல்ல , அவன் நிவாவை வேகமாக இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் .

                   சஞ்ஜனா அடிக்கடி இங்கு வருவதனால் , அனைவரிடமும் பேசிவிட்டு சாமியை வணங்குவதற்காக சென்றாள் . அப்போது , " அம்மாடி சஞ்ஜனா நீ யாரையாவது உனக்கு பாடி காடா ஆள் சேத்துருக்கியா என்ன "... அவளுக்கு தெரிந்த முதியவர் கேட்க ! இல்லையே தாத்தா ஏன் அப்படி கேக்குறிங்க ? இல்லமா உன் பின்னால ரெண்டு பேரு ரொம்ப நேரமா சுத்திக்கிட்டே இருக்காங்க அதான் கேட்டேன் ! இவள் சட்டென்று பின்னால் திரும்பி பார்க்க .


                   கார்த்திக் அவனை இழுத்து கொண்டு ஒரு அகலமான தூனின் பின்னால் மறைந்து கொண்டனர் . மச்சான் அந்த பெருசு போட்டு கொடுத்துருச்சு அவர ...என்று தன் கையின் சட்டையை மடக்கி கொண்டு நிவா நிற்க ... கார்த்திக் சிரித்து விட்டு போடா போ உன்னோட டேலன்ட் க்கு போயும் போய் ஒரு தாத்தவ என்று வாயில் கைவைத்து சிரித்துக் கொண்டே அவன் சொல்ல ..

             போதும் நிறுத்து , உன்னோட ஆள பாலோ பன்னு முதல்ல . கரக்ட் மச்சான் , திடிர் திடிர்ன்னு கானாம போய்டுறா என்றபடி கார்த்திக் அவளை தேடிச் சென்றான் . சஞ்ஜனா சாமியை வணங்க , பூசாரி திருநீர் தட்டை எடுத்து வந்து நீட்ட .. இவள் தான் அனிந்திருந்த தாலியை வெளியில் எடுத்து அதற்கு குங்குமம் வைத்துவிட்டு மீண்டும் சாமியை பார்த்து வணங்கினாள் . சஞ்ஜனா நீ ஒன்னும் கவலை படாதமா நீ நினைக்கிறது சீக்கிரமாகவே நடக்கும் அந்த கடவுள் உனக்கு துனையாக இருப்பார் என்று கூறிவிட்டு பூசாரி செல்ல ..

                  இவற்றை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மயக்கமே வந்துவிட்டது . டேய் கார்த்திக் , மச்சான் என்னடா கடைசியில கல்யாணம் ஆன ஒரு பொண்ண தான் நீ தேடி தேடி பாலோ பண்ண என்று கடவுளுக்கே கேட்கும்படி வேகமாக கைதட்டி சிரித்தான் .கார்த்திக்கு அவனையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வர சற்று தலைவலியும் அதிகம் ஆனது , நேராக தன் காரை நோக்கி வேகமாக நடந்தான் .

                    கார்த்திக் , நில்லுடா ஏன் இவ்வளவு வேகமா போற டேய் டேய் ... அவன் காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டியரிங் மேல் தலையை வைத்து தன் ஒற்றை கையை மடக்கி ஜன்னலில் குத்தினான் . அதனை பார்த்த நிவா , நிலமையை புரிந்து கொண்டு சரி மச்சான் நம்ப போகலாம் நீ முதல்லயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தது தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் சுத்தி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது . எல்லாம் விதி என்று நிவா சொல்ல , கார்த்திக் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் .

                    ஓரே ட்ராஃபிக் ஜாம் ஆகி இருந்தது அந்த இடம் , இவர்களுக்கு முன்னால் நின்ற காரில் இருந்து ஒருவர் பின்னால் திரும்பி ' எக்ஸ்கியுஸ் மீ ஃப்லீஸ் கோ பேக் ' என்றார் . இவனும் வேகமாக பின்னால் தள்ளி நிறுத்தினான் .

                   பிறகு ஒருவர் இவர்களின் காரின் கதவை தட்ட , நிவா திறந்து பார்த்தான் . அவர் ' ஏன்டா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா , பின்னால யாரு இருக்கான்னு கூட பாக்க மாட்டிங்களா என்று அவர் கோபமாக கத்த , நிவா எழுந்து வெளியே பாக்க ..

                   இவர்களின் கார் , பின்னால் நின்று கொண்டு இருந்த ஸ்கூட்டரில் மோதி இருந்தது . டேய் கார்த்திக் அந்த பொண்ணுடா என்று நிவா சொல்ல , சிறிதும் தாமதிக்காமல் அவனும் இறங்கி அங்கே சென்று பார்த்தான் .

                 சஞ்ஜனா கீழே விழுந்ததில் சிறிது மயக்கத்தில் இருந்தாள் . கார்த்திக் அவளை தூக்கிக் கொண்டு தன் காரில் வந்து ஏற , நிவா காரை ஓட்டினான். மச்சான் நீ வேனும்னே தானா அந்த பொண்ணோட ஸ்க்கூட்டில இடிக்கிற மாதிரி கார நிறுத்துன என்று நிவா கேட்க !

                வந்தேன்னு வை முதல்ல கார ஒழுங்கா ஓட்டு சீக்கிரமா எதாவது ஒரு ஹாஸ்பிட்டல்ல நிறுத்து என்றவன் அவளை பார்த்து ,' ஹலோ உங்களுக்கு எதுவும் இல்லங்க சோ நீங்க பயப்படாதிங்க என்றான் '

           பிறகு ஒரு ஹாஸ்பிட்டல் முன்பு காரை நிறுத்த , கார்த்திக் அவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் . பின் டாக்டர் அவளை பார்த்து விட்டு ஒரு இன்ஜக்ஷன் மட்டும் போட்டுவிட்டு ' வெளியே வந்தவர் ' டோன்ட் வொர்ரி வெரும் மயக்கம் தான் என்று சொல்லி அங்கிருந்து சென்றார் .

                     கார்த்திக்கு அப்போது தான் உயிரே வந்தது . பிறகு அவளின் மொபைலை எடுத்து அவளுக்கு வேண்டியவர்களுக்கு ஃபோன் போட போகும் போது " முன்னாலேயே சஞ்ஜனாவின் அம்மா நம்பர் இருக்க அவருக்கே கால் பண்ணி தெளிவாக விசயத்தை எடுத்துச் சொல்ல. அவர்களும் சற்று நேரத்தில் நாங்க வந்துருவோம் அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அவக்கூட இருங்க தம்பி என்றார்கள் .

                கார்த்திக் சஞ்ஜனாவின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தான் .  சிறிது நேரத்தில் அவர்கள் வர , நிவா அவர்களை கண்டுபிடித்து உள்ளே அழைத்துச் செல்ல ..அவர்கள் கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றனர் . நிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை .

                அவளின் அம்மா , கார்த்திக்கை பார்த்து ' மாப்பிள்ளை நீங்களா , எப்படி இருக்கிங்க , இவ்வளவு நாள் எங்க இருந்திங்க என்று விழியில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் அருகில் சென்று கன்னத்தை தடவ இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை ?

                      ஆண்ட்டி நீங்க என்ன சொல்றிங்க எனக்கு எதும் புரியல என்றவன் சஞ்ஜனாவை பார்த்தான் . அப்போது கார்த்திக்கின் சித்தப்பா அங்கு வந்தார் , ( நிவா ஆல்ரெடி அவருக்கு போன் செய்து இருந்தான் ) அவர் , இவர்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்துவிட்டு சற்று நிதானமாகிவிட்டு ' கார்த்திக் இடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் .

         ' ஒரு வருடத்திற்கு முன்பு , உனது விருப்பம் இல்லாமலயே கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணோம் , நீயும் அரை மனதோடு ஓத்துக்கிட்டு மணமேடையில் வந்து அமர்ந்து சஞ்ஜனாவை அக்னி சாட்சியா தன் மனைவியா நீ ஏத்துக்கிட்ட , கல்யாணம் முடிந்த அடுத்த நிமிடமே உனக்கு ஒரு கால் வந்தது நீயும் உடனடியா , அங்கிருந்து போய்ட்ட ..

               சிறிது நேரத்திற்கு பிறகு எங்களுக்கு ஒரு தகவல் வந்துது ' இந்த மாதிரி கார்த்திக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருச்சு அவன் கொஞ்சம் கொஞ்சமா சுயநினைவை இழந்துட்டு இருக்கான்னு .நாங்க வந்து பாத்தப்போ நீ மொத்தமா சுயநினைவை இழந்துட்ட , இங்க வச்சி ட்ரீட்மென்ட் பாத்தா வேலைக்கு ஆகாதுன்னு ஃபாரின் க்கு அனுப்பி ட்ரீட்மென்ட் பாக்க ஆரம்பிச்சோம் . கொஞ்ச நாளைக்கு பிறகு தான் தெரிந்தது உனக்கு ஆக்ஸிடென்ட் ஆன அந்த நாள்ல நடந்த விசயம் எதுவும் ஞாபகத்தில் இல்லை ன்னு முக்கியமா கல்யாணம் நடந்தது .

                  சரி இத எப்படியாவது சரி பண்ணனும் ன்னும் உனக்கு ஞாபகம் வரவைக்க எவ்வளோ ட்ரை பண்ணோம் முடியல , பிறகு டாக்டரும் ' ட்ரீட்மென்ட் கொடுத்தா மட்டும் சரி ஆகாது தானாவே ஒருநாள் அந்த நினைவு திரும்பும் ' சோ அதுவரைக்கும் நான் கொடுக்குற மெடிசினை கொடுத்துட்டு வாங்க என்று டாக்டர் கூறினார் .

                 கடவுள் புன்னியத்துல சஞ்ஜனாவையே உன் கண்ணுல காட்டிடாரு கார்த்திக் என்று சித்தப்பா சொல்லி முடிக்க , ஏற்கனவே வந்த தலைவலியை விட இப்போ அதிகமாக வலிக்க ஆரம்பித்தது அவனுக்கு . உடனே டாக்டரை அழைத்தனர் , டாக்டர் வந்து இவனை செக் செய்ய அவருக்கு எல்லாம் புரிந்தது , அவர் சிரித்து விட்டு ' கவலை படாதிங்க கார்த்திக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்ல அனைவருக்கும் சந்தோசத்தில் வார்த்தைகள் வரவில்லை .

                       சிறிது நேரத்திற்கு பிறகு , சஞ்ஜனா மயக்கத்தில் இருந்து வெளியே வர , கார்த்திக்கும் நடந்தவை ஞாபகத்திற்கு வர , இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .நிவா சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரையும் வெளியே அழைத்து வந்தான் .பின் கார்த்திக்கின் அம்மா , அப்பா என்று அனைவரும் வந்தனர் .

              உள்ளே , சஞ்ஜனா எழுந்து வேகமாக ஓடி போய் நின்று கொண்டு இருந்த கார்த்திக்கை கட்டிப்பிடிக்க , இவனும் அவளை இருக்கமாக அணைத்துக் கொண்டு ஐ லவ் யூ சஞ்ஜனா , என்று அவளின் கன்னதிலும் , நெற்றியிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தான் .

               இங்கே நிவாவோ ' . கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒய்ஃபையே தொறத்தி தொறத்தி பாலோ பண்ணி , என்னையும் உன்கூட சேத்துக்கிட்டு லவ் பண்ண மொத ஆளு என்னோட ஃப்ரண்ட் கார்த்திக் மட்டும் தான் ! டேய் மச்சான் நீ எப்போதும் சந்தோசமா இருப்ப இந்த நிவாவோட ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும் என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர் .

          இங்கு கார்த்திக் , சஞ்ஜனாவை தூக்கி சுற்றி கொண்டு இருந்தான் ...

  தேடலின் முடிவு 🍁 நீயே.......💌


       



Rate this content
Log in

Similar tamil story from Comedy