பன்னீர் இலை
பன்னீர் இலை
ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை.
திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர். திருச்செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர்
