❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️ 4
❤️ மன்னிப்பாயா தாரகையே ❤️ 4
அமெரிக்க நியூயார்க் சிட்டி இரவு நேரம் மின் விளக்குகளின் பகலாக மாற முயற்சித்து கொண்டு இருந்தது. வசதி படைத்தோர் வாழக்குடி அமைவிடம் அங்கே உள்ள ஒரு சிறு மாளிகையில் தன் மகனிடம் பேசு வதற்கு காத்து கொண்டு இருந்தனர்.ரவி(ரவிராம் சக்கரவர்த்தி)மும் அவர் மனைவி ராதாவும்.
தங்கள் மகனை இப்போது பார்த்தால் தான் இல்லை கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிளம்பினால் வார இறுதியான சனி ஞாயிறு இரண்டு நாட்களையும் கழித்து விட்டு திங்கள் காலையில் தான் வருவான்.
ஆனால் ஒரு அவசர முடிவு எடுக்க வேண்டும் அதனால் அவன் தயார் ஆகி கொண்டு உள்ளான். அவன் கிளம்புவதர்க்குள் பேசுவதற்க்காக காத்துள்ளனர்.
கபிலன் தயார்ஆகி கையில் தன் விலையுயர்ந்த காரின் சாவியை கையில் சுற்றிய படி படிகளில் இறங்கி வந்தான்.பாய்மாம் பாய் டாடி என்று நிற்க்காமல் சென்றவரை கபிலா நில்லு உன் கிட்ட கொஞ்சம் பேசணும் no dad iam already late so I have to go என்றான்.ரெம்ப முக்கியமான விஷயம் வா வந்து உட்கார் என்றார் அதட்டலாக.
கோப படாத அப்பா தன்னிடம் கோபப்படவும் வந்து எதிரில் அமர்ந்தான் .ரவி தன்னை சரி படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
தாத்தா காலையில் போன் பண்ணியிருக்கார் அவர்க்கு உடம்பு முடியலாம் .
என்ன பன்னுதாம் என்று பதரி கேட்டான் தாத்தா என்றால் மிகவும் பிரியம் .
ஹாட் ப்ராப்ளம் ஒருபைப்பாஸ் சர்ஜரி பன்னனுமா. நம்மை உடனே கிளம்பி வர சொல்றார் என்றார் ரவி.
இதை கேட்டதும் மனதிற்க்கு கவலையாக இருந்தது.உடனே சரி டாட் எப்ப கிளம்பலாம் என்றான். அது தான் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.
என்ன டாட்.
நாம் மொத்தமா இந்தியாவில் செட்டில் ஆகிறதாய் இருக்கேன்.
ஏன் டாட் .
ஆமா அப்ப சின்ன வயசு நிரைய சம்பாதிக்கும் ஆசை அதுக்கேத்த மாதிரி நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க தொழிலும் நல்லபடியா போச்சு நல்ல லாபம் வரவும் அதை புடிச்சுகிட்டு ஓட ஆரம்பிச்சுட்டேன் இப்ப எல்லாம் ஓவர் .அதான் மறுபடியும் சொந்த ஊருக்கே போய்றலாம்னு பாக்கூறேன்.
அவன் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் என்னவேன்று தெரியவில்லை தாத்தா உன்ன கண்டிப்பா பாக்கனும்றாரு என்று ராதா சொன்னார் . மாமா குரலே சரியில்ல தம்பி என்று குரல் உடைந்து பேசினார் .
கவலை படாதிங்க அம்மா தாத்தாக்கு ஒன்னும் ஆகாது என்று ராதா அருகில் அமர்ந்து அவருக்கும் தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
ஓகே டாட் என்ன முடிவு நீ இப்ப உடனே கிளம்பி இந்தியாவுக்கு போ அங்க என்னோட பிரண்டு ஒருத்தன் கன்ஷடக்ஸன் பிஸ்னஸ் பண்றான் . அவனுக்கு ஒரு பொன்னுதான் அவளையும் கல்யாணம் பன்னி கூடுத்துட்டான்.அதுனால அவனோட shar70சதவிதம் நாம் வாங்கி கம்பேனிய டேக் ஓவர் பண்ணு அதுக்குள்ள நான் இங்க இருக்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு ஒரு மாசத்துல அங்க வந்துறேன் என்றார்.
ஓகே டாட் நான் போறேன் என்றான்.
சரி நீ உன் வேலைய எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டு டிக்கெட் போட்டு கிளம்பு என்றாள் ரவி.
அப்பாவின் முடிவோடு தன் மனதில் உள்ள பல கேள்விகளுக்கு பதிலை தேடி இந்தியா கிளம்ப தயார் ஆனான் கபிலன்.