STORYMIRROR

anuradha nazeer

Tragedy

3  

anuradha nazeer

Tragedy

கரோனா ஊரடங்கு

கரோனா ஊரடங்கு

1 min
12.1K

கரோனா ஊரடங்கு: கடையை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு; சிசிடிவி கேமராவும் கொள்ளை

கரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் மாநிலத்தில் மீண்டும் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.


மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதீதமான மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், அடிமையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் காட்கேயில் உள்ள மதுபானக் கடையை உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை அண்மையில சிலர் திருடிச் சென்றனர்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Tragedy