STORYMIRROR

அர்விந்த் நாராயணன்

Drama Others

4  

அர்விந்த் நாராயணன்

Drama Others

அதிர்ஷ்யாவின் காதலும் & ஊர் சுற்றும் புராணமும்!

அதிர்ஷ்யாவின் காதலும் & ஊர் சுற்றும் புராணமும்!

6 mins
3

அதிர்ஷ்யாவின் காதலும் & ஊர் சுற்றும் புராணமும்!

அதிரஷ்யாவும் அவள் தோழி அவந்திகாவும் அமெரிக்காவின் நியூ யார்க் JFK விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலா லம்பூர் செல்ல விமானத்தில் ஏறி அமர்திருந்தனர். 24  மணி நேரம்  செல்ல கூடிய விமானம், நடுவில் 3 மணி நேரம் கத்தார் தோஹாவில் தரையிறங்கும் .  

விமானம் கிளம்பிய சில மணி நேரம் பிறகு, வானுயரத்திற்கு சென்றபின் உணவு பரிமாறப்பட்டபின் இருவரும் உறக்கத்திற்கு சென்றனர். அதிர்ஷ்யா எதை பற்றி சிந்திக்க வேண்டாம், நினைக்க வேண்டாம் என்று இருந்தாளோ, அது அவள் நினைவில் வர தொடங்கியது. அவளின் கடந்த கால இனிமையான மற்றும் கசப்பான நினைவுகளை மறக்கவே ஒரு புது பிரயாணம், போகாத இடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள் அவள் உயிர் தோழி அவந்திகா. இருவரும் இந்தியர்கள் தான் சென்னையை சேர்ந்தவர்கள் ஆனால் தற்போது வசிப்பது அமெரிக்காவில். என்ன தான் அமெரிக்காவில் வசித்தாலும் இந்திய கலாச்சாரத்தில் மூழ்கியவர்களே.

அதிர்ஷ்யா நினைவுகள் ஆறு வருடத்திற்கு முன் சென்றது. 2019 அப்போது அவர்கள் இருந்தது ஹூஸ்டன் நகரில், யூனிவர்சிட்டி of ஹூஸ்டன் இல் MS படிப்பு அதன் கடைசி ஆண்டில் தான் அவனை முதன் முதலாய் பார்த்தாள், அவன் பெயர் கார்த்திக். நல்ல வசீகரமான இந்திய குடிமகன் என்று பார்த்தவுடனே சொல்லி விடலாம்.படிப்பு முடிந்தவுடன் சில வருட அமெரிக்கா வேலை அதன் பிறகு இந்தியாவில் குடியேற வேண்டும் என்று தெளிவாக இருந்தாள் அதிர்ஷ்யா அதே நினைப்பில் கார்த்திக் இருப்பதும் தெரிய வர இரண்டு பேருக்கும் பற்றி கொண்டது காதல். அந்த ஒரு வருடம் கார்த்திக், அதிர்ஷ்யா காதல் மழையில் நனைய ஆரம்பித்தனர்.

அதிர்ஷ்யா எதையாவது நினைத்து முடிப்பதற்குள் அதை நிறைவேற்றி இருப்பான் கார்த்திக் அப்படி ஒரு அளவில்லா காதல் அவள் மேல். காலையில் எழுந்தவுடன் உடற் பயிற்சி செய்வது முதல், கிளம்பி கல்லூரி சென்று, பாடங்களை படித்து, அவனிடம் பேசிவிட்டு மீண்டும் வீடு வந்து பத்திரமாக சேர்த்த பின்னரே அவன் கிளம்புவான், அவன் வீட்டிற்கு சென்றும் இருவரும் மணிக்கணக்காக தொலைபேசியில் பேசியபடியே இருப்பர். அடிக்கடி சிறு சிறு பரிசுகள் கொடுத்து ஆச்சிர்ய படுத்துவான். அதிரஷ்யாவின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை காட்டுவான்.

இப்படி சென்று கொண்டிருந்த அவர்கள் காதல் அவர்கள் படிப்பு முடிந்தவுடன் தாமதிக்காமல் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தது. வீட்டில் உள்ள பெரியர்வர்களிடம் பேச அவர்களும்  சம்மதித்தனர். இரு வீட்டாருக்கும் வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் கிடைக்கவில்லை, ஒருவருக்கொருவர் அவர்களுக்ககே பிறந்தவர் என்றே புகழ்ந்தனர்.

திருமண தேதி டிசம்பர் 14, 2019 என்று முடிவானது, 

"கார்த்திக் 01 டிசம்பர் திருமணத்திற்காக இந்தியா போகணும், நீயும் அதே நாள் என் கூட வரணும் புரியுதா" 

"முடியாது" என்றான் கார்த்திக். 

கார்த்திக் மிக பெரிய கால் பந்து (Soccer) ரசிகன்.

"அதிர்ஷ்யா, உனக்கே தெரியும் கால் பந்து ஆட்டம்னா எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு, என் அமெரிக்கன் நண்பன் கூட பொலிவியா நாட்டுக்கு போகணும், அங்கே ஒரு கால் பந்து போட்டி அதில் என் அமெரிக்கா நண்பன் விளையாடுறான், அதை பார்க்கணும்,  அங்கே தான் என் மற்ற நண்பர்கள் எல்லோர்க்கும்  bachelor பார்ட்டி, இதெல்லாம்  முடித்து, 03 டிசம்பர் இந்தியால இருப்பேன், இந்த ஒரு முறை மட்டும் என்னை விட்டுடு, இதுக்கு அப்புறம் வழக்கை பூரா உன்கூட தான் இருக்க போறேன்" என்று செல்லமாக தட்டினான் அவளை.

அதிர்ஷ்யா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இந்த ஒரு முறை தானே வேறு ஒரு வாய்ப்பு இப்படி கிடைக்காது என்று நினைத்து ஒரு மனதாக சம்மதித்தாள்.

25 நவம்பர் 2019, தெற்கு அமெரிக்காவில் பொலிவியா நாட்டிற்கு சுகிறே  ஊரில் Bachelor Party முடித்து, கால் பந்து போட்டிக்கு பார்வையாளராக சென்றான் கார்த்திக். அங்கே பொலிவியா நாட்டின் கால் பந்து குழுவில் ஒருவர், அவன் அமெரிக்க நண்பனின் நண்பன், நல்ல ஒரு அறிமுகம் கிடைத்து அடுத்து ஒரு போட்டியை காண, அந்த குழுவுடன் ஒரு தனி விமானத்தில் பொலிவியாவிலிருந்து Carribean islands செல்ல தயாரானது. Lamia Flight 2933 என்கிற சிறிய விமானம் 77 பேர் கொண்ட இருக்கையில் கிளம்பி போக, அந்த நேரம் யாரும் எதிர்பாராத விதமாக விமானத்தின் எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்னால் விமானம் Carribean island மலை மீது மோதி சம்பவ இடத்திலேயே பலர் இறந்தனர். 

பிரயாணம் செய்த 77 பேரில் 71 பேர் இறந்தனர். அதில் கார்த்திக் பெயரும் வந்தது, அந்த செய்தி கேட்ட நொடி முதல் பித்து பிடித்தது போல் ஆனாள் அதிர்ஷ்யா, கார்த்திக் இல்லாத ஒரு வாழ்க்கை அவளால் நினைத்து பார்க்க முடியவில்லை.

இவை அனைத்திலும் அவள் கூடவே இருந்தது அவந்திகா, இரண்டு முறை அதிர்ஷ்யா தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியும் செய்து அவந்திகாவாள் காப்பாற்றப்பட்டு. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லாமல் கார்த்திக்கின் நினைப்பில் வாழும் அதிரஷ்யாவின் நிலைமையை மாற்ற வேண்டும் என்று அவளை இப்போது வேறு இடத்திற்கு கூட்டி செல்கிறாள் அவந்திகா.    

விமானம் கோலா லம்பூர் வந்திறங்கியது, சுய நினைவிற்கு வந்தாள் அதிர்ஷ்யா. நீண்ட நேர விண் பயண களைப்பு அவர்களை அசதியாக்கியது, ஒரு நட்சத்திர ஹோட்டல் சென்று ஒய்வு எடுத்தனர். ஒரு நாள் முழுவதும் ஒய்வு எடுத்து அடுத்த நாள் சுற்றுலாவை ஆரம்பித்தனர்.

நல்ல வசதியுடைய கார் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, வந்தது ஒரு தமிழ் தெரிந்த ஓட்டுநர். முதலில் அவர்கள் போனது petronas tower கோலா லம்பூரின் உயரிய கட்டிடம், ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் டிக்கெட் கிடைத்தது 65 ரிங்கிட், பின் Top floor சென்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.  

அங்கே ஒரு பெண், "கார்த்திக்....கார்த்திக்" என்று கத்தி கொண்டிருந்தாள், சட்டென்று திரும்பிய அதிர்ஷ்யா அங்கே அந்த பெண் அவளின் சிறு வயது மகனை கூப்பிட்டபடி ஓடி கொண்டிருந்தாள்.

அதிர்ஷ்யா சற்று கலக்கமானாள், அவன் பெயர் கூட அவளை ஏதோ செய்தது, மனசுக்குள் மீண்டும் நினைக்காதே நினைக்காதே என்று சொல்லி கொண்டே அடுத்த இடம் நோக்கி நகர தயாரானாள்.

அடுத்தது Menara KL Tower - இது petronas Tower பக்கத்திலே உள்ளது இங்கே செல்ல 50 ரிங்கிட் டிக்கெட் ஒருவருக்கு, உள்ளே கோலா லம்பூரின் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு இருக்கும். கோலா லம்பூர்  பெயர் போட்ட ஆடை, பரிசு பொருட்கள் என்று பல வகையுண்டு. அதிரஷ்யாவும் அவந்திகாவும் மும்முரமாக புகை  படம் எடுப்பதும் பரிசு பொருட்கள் வாங்குவதிலும் குறியாக இருந்தார்கள். அங்கே ஒரு தேன்நிலவு வந்த இளம் தம்பதியினர் அங்கே இருப்பவர்கள் அனைவரும் பார்க்கும்படி அந்த பெண்ணின் காலடியில் அமர்ந்து அவளுக்கு ஒரு வைர மோதிரம் பரிசாக கொடுக்க, அவள் வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் அவளை அப்படியே இரு கைகளால் தூக்கி சில தூரம் நடக்க சுற்றி இருந்த கூட்டம் கைதட்டி அதை ரசித்தது. இதை பார்த்ததும் அதிரஷ்யாவின் கண்கள் நனைய ஆரம்பித்தன, இதை போலவே ஒரு முறை கார்த்திக் அமெரிக்காவில் அவளுக்கு செய்தது அவள் நினைவுக்கு வந்தது.

"அவந்தி வா ஹோட்டல் போலாம்...."

"இப்போ என்னாச்சு, நீ எதை பற்றியும் யோசிக்காமல் என் கூட வா...." அவந்திகா அவளை இழுத்து சென்றாள்.

கார் நேராக சீனா டவுன் சென்றது இங்கு அனைத்து சீனா பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும், சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும். பல கடைகள் ஏறி இறங்கி அதிர்ஷ்யா தன்னை மறந்து அந்த கடைகளை ரசித்து கொண்டிருக்கையில். ஒரு ரோட்டோரம் இருக்கும் ஒரு ஆடை கடை பார்த்துவிட்டு அப்படியே நின்றாள். அவந்திகா என்னவென்று கேட்க அவள் இரண்டு சட்டைகளை காண்பித்தாள். ஒரு சட்டையில் ஒரு பெண் உருவத்துடன் LO என்றும் இன்னொரு சட்டையில் ஒரு ஆண் உருவத்துடன் VE என்று இருந்தது. இரண்டும் சேர்ந்தால் LOVE என்று வருவது போல் அதிரஷ்யாவும் கார்த்திக்கும் அதே சட்டையில் அமெரிக்காவில் எடுத்த புகைப்படத்தை பார்க்க மீண்டும் நினைவுகள் கார்த்திக்கிடமே சென்றது. 

அவந்திகா இவளை எப்படி மாற்றுவது என்று புரியாமல் குழம்பி போக, கார் நேராக ஹோட்டல் சென்றது சிறிது நேர ஓய்வுக்கு பின் வெளியே செல்லலாம் என்று முடிவு எடுத்தனர். அவளை உறங்க சொல்லிவிட்டு அவந்திகா மட்டும் கீழே சென்று வருகிறேன் என்று கிளம்பினாள்.

அதிரஷ்யாவின் எண்ணங்கள் மறுபடியும் தீய எண்ணங்களாக மாற ஆரம்பித்தன, தனியாக இருக்கும் நேரத்தில் மேலிருந்து குதித்து விடலாமா, அங்கே இருக்கும் கத்தி எடுத்து கை அறுத்து கொள்ளலாமா என்று தீய சிந்தனைகள் அவளை வேகமாக பயமுறுத்த ஆரம்பித்தன.

மூளையில் ஓர் மூலையில் வேண்டாம் வேண்டாம் என்றது ஒரு குரல் ஆனால் மற்ற செல்கள் எல்லாம் போ துணிந்து போ என்றது,கையில் நடுக்கத்துடன் கத்தி எடுக்க, டக் என்று கதவு திறந்து அவந்திகா உள்ளே வர, அப்படியே ஆப்பிள் நறுக்கி சாப்பிட ஆரம்பித்தாள். அன்று எங்கும் செல்லாமல் ஹோட்டல் முழுதும் சுற்றி வந்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்பினார்கள்.

இப்போது கார் நேராக பத்து மலை சென்றது. இங்குதான் சக்தி வாய்ந்த முருகன் கோவில் உள்ளது.கோவில் கீழ் அடிவாரத்தில் நாம் வேறு ஒரு நாட்டில் இருப்பதே தெரியாது அப்படியே பழனியில் இருந்தால் எப்படி இருக்கோமோ அப்படி இருந்தது. 272 படிக்கட்டுகள் ஏறி முருகன் தரிசனம் பார்க்க அதிரஷ்யாவும், அவந்திகாவும் சென்றனர்.சிறிய கோவிலாக இருந்தாலும் மிக பிரபலம் அங்கே  முருகன் சன்னிதானத்திற்கு முன் நின்று கண்ணீருடன் வேண்டி கொண்டாள் அதிர்ஷ்யா.

மீண்டும் கீழே இறங்கும்போது "அதிர்ஷ்யா என்ன வேண்டின" என்று அவந்திகா கேட்க,

"என் கார்த்திகை ஏன் என்கிட்டேந்து பிரிச்சேன்னு கேட்டேன்".

"உன்னால அவனை மறக்க முடியலையா?" அவந்திகா கேட்க

"எப்படி முடியும் அவந்தி, என் உயிரே அவன் தான், அவனை பிரிஞ்சு இத்தனை வருஷம் உயிரோட இருந்ததே  நரகம் தான் சொல்லுவேன்".

"ஒரு வேளை கார்த்திக் உயிரோட இருந்தால் என்ன செய்வ?"

"அவன் எனக்குள் இன்னும் உயிரோட தான் இருக்கான் என் பின்னாடியே பின் தொடர்ந்து வந்து எதையாவது ஞாபக படுத்திண்டே இருக்கான். நான் அவனோட போனா மட்டும் தான் எனக்கு நிம்மதி".

"அப்படியா போ போ அதிர்ஷ்யா, உன் கார்த்திக் கிட்ட போ அவன் தான் உன் உலகம்னு எனக்கு நல்லா தெரியும் போ அங்க தான் இருக்கான் பாரு உன் கார்த்திக், அவன் சாகலை உயிரோட தான் இருக்கான் என்று அவந்திகா சொல்ல....."

அங்கே கோவில் வாசலில் காரில் வந்து இறங்கினான் கார்த்திக், "முகத்தில் பெரிய வடு, ஒரு கால் பறி போய் மர கால் வைத்திருந்தான்". அதிர்ஷ்யா உணர்ச்சிவசத்தில் ஓடி சென்று அவனை கட்டி கொண்டு அழுதாள்,சற்று நேரத்தில், மூவரும் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றனர்.

கார்த்திக் பேச தொடங்கினான், "அதிர்ஷ்யா, அந்த விமான விபத்தில் பாரச்சூட்டுடன் கீழே குதித்த போது மரத்தில் சிக்கி கால் பறிபோனது முகம், கை, கால் என்று ஏகப்பட்ட அடி, எலும்பு முறிவும் கூட, கீழே கடலில் சென்று விழுந்து அது வேறு ஒரு இடத்தில் கரை சேர்த்து மீண்டும் பிழைப்பேன் என்ற வாய்ப்பே இல்லாமல் பிழைத்து, ஒரு வருஷம் கோமாவில் இருந்த நான் எழுந்தபோது நான் இருந்தது carribean island ஒரு தீவில்,  அவர்கள் என்னை இந்தியாவிற்கு அனுப்பினாங்க" சொல்லும்போதே கார்த்திக்கின் குரலும் தழுதழுத்தது, கண்கள் குளமாகின.

"இந்த கோரமான முகத்தை வைத்துக்கொண்டு என் நம்பிக்கை எல்லாம் போய் விட்டது நான் மீண்டு வருவேன் என்று நினைக்கவில்லை, உன்னை இந்த கோலத்தில் காண விருப்பமில்லை.படிச்ச படிப்பை வைத்து வேலை தேடி கோலா லம்பூர் வந்தேன்....எந்த பழைய ஆட்களோடவும் நான் பேசலை அப்போ தான்...." என்று நிறுத்தினான்.

அவந்திகா தொடர்ந்தாள், "என் குடும்பம் கோலா லம்பூர் சுற்றுலா வந்தாங்க அவங்க புகைப்படத்தில் பின்னால இருந்தது கார்த்திக் மாதிரி தோன எங்க அப்பாவை பேச சொன்னேன்  அப்போ தான் எனக்கும் தெரியும் இவன் உயிரோட இருந்ததே, உன்கிட்ட சொல்ல கூடாது சொன்னான் , நான் தான் கார்த்திக் இல்லாம நீ என்னென்ன கஷ்ட படரேன்னு சொல்லி எப்படியாவது உன்னை இங்க கூட்டிட்டு வர முடிவு பண்ணேன்".

"நேத்து உன்னை ரூம்ல விட்டுட்டு இவனுக்கு கால் பண்ணத்தான் போனேன், நேத்து தான் நாம இங்க வந்திருக்கோம்னு சொன்னேன்" அதிர்ஷ்யா தோழியை கட்டி கொண்டாள். 

அதிர்ஷ்யா கார்த்திக்கிடம் சென்றாள், "இவ்வளவு தான் நீ என்னை புரிந்து வெச்சிருக்கியா, நான் உன் அழகை காதலிக்கலை உன் மனசை தான் காதலிச்சேன் நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனக்கு நீ வேணும், உன்னை விட்டு இனி எங்கேயும் போக மாட்டேன்" என்று அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள், அவளை நினைத்து அவன் கண்களில் நீர் வழிந்தது. அதிரஷ்யாவும் கார்த்திக்கும் ஒன்று சேர்ந்தார்கள்.

தன் தோழியின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கிய மகிழ்ச்சியும் அதே நேரத்தில் ஒரு தலை காதலாய் கார்த்திகை தன் மனதிலும் வைத்து கனத்த இதயத்துடன் அங்கிருந்து பயணமானாள் அவந்திகா. 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama