STORYMIRROR

அர்விந்த் நாராயணன்

Fantasy

4  

அர்விந்த் நாராயணன்

Fantasy

வாழ்க்கை @ 2050

வாழ்க்கை @ 2050

4 mins
5

வாழ்க்கை @ 2050

21 ஆகஸ்ட் 2050, பஞ்சாபகேசனுக்கு 80 வயது, உடல்நல கோளாறால் இயற்கை எய்தினார், அவரின் ஆன்மா நேராக சொர்க்கம் செல்ல, அங்கே அவரின் மனைவி பத்மினி அவரை வரவேற்க தயாராக இருந்தார் சொர்க்கத்தில்.

“வாங்க வாங்க எவ்வளவு வருஷம் ஆச்சு உங்களை பார்த்து, நான் இங்க வந்து 30 வருஷம் ஆகுது இப்போ தான் சொர்கத்துக்கு வழி தெரிஞ்சுதா?”

பஞ்சாபகேசன் அவளை பார்த்தபடி “நீ புண்ணியம் பண்ணிருக்க 55 வயசுல 2020 வருஷம் வந்த கொரோனா தாக்கி சீக்கிரம் வந்துட்ட, நான் இருந்து எல்லா கஷ்ட நஷ்டத்தையும் பார்த்துட்டு தான் வரணும்னு தலையில எழுதி இருக்கு”.

“நான் திரும்பவும் நம்ம குடும்பத்திலே தான் பிறக்கணும்னு ஒரு வரம் வாங்கியிருக்கேன், நம்ம பேரனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு போல இருக்கே, அவனுக்கு மகளா நான் மீண்டும் நம்ம குடும்பத்துக்கே பூலோகம் போக போறேன். எப்படி இருக்கு நம்ம உலகம், நம்ம ஊரு, நம்ம வீடு?” ஆர்வமாய் கேட்டாள் பத்மினி.

“நான் எங்கே வந்தாலும் என்னைவிட்டு முன்னாடி போகிறதுல குறியா இருக்கியே, ஊர் உலகத்துக்கு என்ன ஏகப்பட்ட மாற்றம் வந்திருக்கு தான். இப்போ வருஷம் 2050 ஆச்சு”.

“சொல்லுங்க என்ன மாறி இருக்கு தெரிஞ்சிக்கிறேன்”.

சொல்றேன் கேளு என்று தொடங்கினார் பஞ்சாபகேசன்

“ரொம்ப வருஷம் விவசாயம் செழிக்கவே இல்லை எல்லோரும் ஒரு மாத்திரை தான் சாப்பாட்டுக்கு போட்டுக்கறா. அதுக்கும் பக்க விளைவு வந்து அவஸ்தை பட்டா”.

"என்னது ஒரு மாத்திரையா....அப்போ சமைக்கிற வேலை மிச்சமா?" நிம்மதியானாள் பத்மினி.

“கொரோனா போனதுக்கு அப்புறம்  கணினி சம்பந்தமான வேலையெல்லாம் வீட்டுக்குள்ளேயே மாறிடுச்சு, அப்புறம் மறுபடியும் சரியாச்சு, கொரோனா மறுபடியும் 2030 வந்து பல உயிரை வாங்கிட்டு போச்சு”.

"மறுபடியும் 2030 இல் கொரோனவா, அப்பாவும் தப்பிச்சிருக்கீங்க நீங்க...." திரும்பி யமதர்மறையே ஒரு பார்வை பார்த்தாள் பத்மினி....அதில் பல அர்த்தம் இருந்தது.

“பசங்க பள்ளி கூடமும் வீட்டுக்குள்ளேயே வந்திருச்சு, அவங்களுக்கு பிடிச்ச பாடம் மட்டும் படிச்சா போதும், எல்லா பாடமும் படிக்கணும் அவசியம் இல்லை. கல்லூரியும் அப்படி தான், என்ன பாடம் படிக்குறாங்களோ அதுக்கு மட்டும் எக்ஸாம் எழுதலாம்”.

"அட இது நல்லா இருக்கே, நமக்கு அப்படி இல்லையே" ஏக்கமானாள்

“நிறைய கட்டிடம் சும்மா இருக்க வேண்டிய நிலைமை. நீ பார்த்த பெரிய கம்பெனி உள்ளே இப்போ காய்கறி கடை, பழ கடை தான் நடத்துறா அதனால மார்க்கெட் ஏரியா இப்போ காலியா இருக்கு குப்பை இல்லாம”

"அது சரி நல்லது தான்"

“கிராமம்னு ஒன்னு இல்லவே இல்லை எல்லாமே சிட்டி ஆகிருச்சு”.

"ஆஆ.... அப்படியா"

“யார் வீடு கட்டினாலும் வீட்டுக்கு பக்கத்துல பெரிய இடம் விவசாயத்துக்கு வாங்கணும் அவங்களே உழுது சமைச்சு சாப்பிடணும்.இதுதான் புது சட்டம்”.

“விவசாயம் தெரியாதவங்க காசு கொடுத்து ரோபோட் வாங்கிக்கலாம் அது எல்லாத்தையும் பண்ணி தரும், அதுக்கான பராமரிப்பு செலவு ரொம்ப அதிகம்”.

"ரோபோ வேற வந்திருச்சா"ஆச்சிர்யமானாள் பத்மினி.

“ஒவ்வொரு பெரிய மனுஷனும் ஒரு PA மாதிரி ஒரு ரோபோட் வெச்சிருப்பான் மனுஷனுக்கு மனுஷன் நம்பிக்கை இல்லை எல்லோரும் மெஷின் நம்ப ஆரம்பிச்சுட்டாங்க”.

“ஒரு வீடோ, ஒரு அடுக்கு மாடி குடியிருப்போ கண்டிப்பா இரண்டு மரமாவது வைக்கணும்னு சட்டம், மரத்தை வெட்டினா ஒரு வருஷம் சிறையில், மரம் வீட்டில் வளர்க்கலைன்னா இரண்டு வருஷம் சிறையில். அடுக்கு மாடி குடியிருப்பில் அவங்க வீட்டு நம்பர் அந்த மரத்தில் ஒட்டி வைக்கணும்னு சட்டம்”.

ருபாய் நோட்டை கண்ணுல பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, எல்லாமே பாங்கில் கார்டில் தான், உன் அக்கௌன்ட்ல எவ்ளோ காசு இருக்குனு நம்பறாக பார்த்துக்கலாம்”.  

“சொந்த வாகனமே தேவை இல்லை, அபார்ட்மெண்ட் பார்க்கிங் சண்டை இல்லை, அப்படியே வெளியே போகணும்னா டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் ரிமோட் கார் வரும் அதுவே கூட்டிட்டு போகும், காசு  பேங்க் மூலம் எடுத்திடும்”.

"அப்போ பசங்க விளையாட நெறய இடம் இருக்கு சொல்லுங்க...."பத்மினி குஷியானாள்

"வெளிய போகிறதுக்கு சில வேலை தான் இருக்கும், விளையாட்டு தளம், சினிமா திரையரங்கம், கோவில், மருத்துவமனை இதுக்கு மட்டும் தான் வெளிய போறாங்க”.

“Factory சம்பந்தமான கம்பெனிக்கு வேலைக்கு வெளிய போறாங்க அவங்களுக்கும் பறக்கிற கார்ல வந்து இறக்கிட்டு போவான். நம்ம பேரன் அப்படி தான் போறான்”.

“ராணுவத்தில் எல்லாமே ரோபோட் தான் மனுஷங்க யாருக்கும் வேலை இல்லை, ரோபோட் பழுது பார்க்க மட்டும் தான் ஆட்கள் ராணுவத்தில் இருக்காங்க”.

“இதனால பல online மோசடி நடக்குது, online திருட்டு நடக்குது”.

“தண்ணீர் பிரச்சனை பரவாயில்லை கடலிலிருந்து ஒரு பைப்பை வீட்டுக்கு வரும் அந்த பைப்க்கு காசு அரசுகிட்ட தரணும்.

“கச்சேரி வீட்டிலிருந்தே பாடலாம், online booking மாதிரி உள்ளே வந்து பார்க்க மட்டும் காசு. எவ்ளோ பேரு வேணாலும் book பண்ணிட்டு பார்க்கலாம், எத்தனை ticket book ஆகி இருக்கு உனக்கே தெரிய வரும்”.

“Mobile ஒரு chip மாதிரி மாறிடுச்சு, அதில் எல்லாமே இருக்கு”.

“குழந்தைக்கு காது குத்துவது போல், chip பொறுத்த ஒரு function வைக்கறாங்க. அந்த chip எல்லாத்தையும் சொல்லிடும், எவ்வளவு நடந்த, ஓடின, ரத்த ஓட்டம் எப்படி, BP எப்படி, உடம்பில் எந்த உறுப்பு கோளாறு ஆனாலும் அதை ஒரு கலர்ல வெளிய காட்டிடும்”.

"ஆத்தாடி....இது என்ன இப்படி இருக்கு" பத்மினி கண்கள் விரிந்தன.

“இளமையா வைத்துக்கொள்ள பல மாத்திரை இருக்கு, யாருக்கும் வயசாகறதே தெரியாது”.

“குழந்தை பெத்துக்க 10 மாசம் சுமக்கனும் அவசியம் இல்லை, மருத்துவமனை போய் இரண்டு விந்து கொடுத்தா போதும் அவங்க 10 மாசம் வளர்த்து எப்போ வேணுமோ டெலிவரி பண்ணுவாங்க”.

".....!!???"

“சாப்பாடு, காய் கறி, மளிகை, இது எல்லாமே வீட்டுக்கு வரும், நீ பார்த்தது ஆளு வந்து தருவான், இப்போ மெஷின் வந்து தரும், இல்லைனா கேமரா பறந்து வந்து தரும்”. 

“ரயில்வே ஸ்டேஷன்ல போர்ட்டர் யாரும் கிடையாது எல்லாமே ரோபோ தான்”.

“அடிக்கடி பருவ நிலை மாற்றம் வரும் மழை, வெள்ளம், புயல் இதெல்லாம் மாசத்துக்கு ஒன்னு வரும்”.

“கோடீஸ்வரன் எல்லோருமே கப்பல் வாங்கி வெச்சிருப்பான், அது தான் அவனுக்கு வீடே”.

“நம்ம வீடு தி நகர் தானே, நடந்தே பீச் க்கு போகலாம் இப்போ அண்ணா சாலை தான் பீச் ரோடு தெரியுமா? 2045 வருஷம் கடல் உள்ளே வந்திருச்சு, அண்ணா சாலை அந்த பக்கம் உள்ள ஏரியா எல்லாம் காணாம போச்சு”.  

"அட பாவமே....! தி நகர்ல பீச் இருக்கா?"

"விமான போக்குவரத்து ஜாஸ்தி ஆகிருச்சு வருஷத்துக்கு ஏகபட்ட விபத்து ஆகுது”.

“கல்யாணம் பொண்ணு, மாப்பிள்ளை இருந்தா போதும் மத்தவா எல்லாம் onlineல பார்க்கலாம் என்ன பண்ணனும் சொல்லலாம்”.

“ப்ரோஹிதர் கூட ரோபோட் வெச்சிருக்கா, அது மந்திரம் எல்லாம் அருமையா சொல்லும். கல்யாணம், கருமாதி எல்லா சடங்கும் பண்ணி வைக்கும்”.

"என்ன இது இவ்ளோ மாற்றமா...." பத்மினிக்கு தலை சுற்றியது.

“ஒரே ஆறுதல் ஜாதி கலவரம், மத கலவரம், குழாய் அடி சண்டை, தண்ணி அடிச்சு சண்டை இதையெல்லாம் பார்க்கவே முடியாது”.

“அரசியல்வாதி கூட ரோபோட் தான் இருக்கும், ரோபோட் வைத்து அடிச்சிக்குற அரசியல் இருக்கும்”. 

“செத்தா கூட கூட்டம் வராது அப்படியே எலக்ட்ரிக் சுடுகாடுல எரிச்சு சாம்பல் மட்டும் தருவா, அதுக்கு கூட online booking இருக்கு book பண்ணாம சாக கூட முடியாது, மாசா மாசம் காசு போட்டுட்டே வரணும், செத்ததும் அவங்களே எல்லா காரியமும் செய்திட்டு, சாம்பலை பார்சல் பண்ணி யாருக்கு அனுப்பணுமோ அனுப்பிடுவா, யாரும் நேரில் வந்து பார்க்க மாட்டா, விசாரிக்க மாட்டா, என் கதையும் அப்படி தான் முடிஞ்சது”. 

இதையெல்லாம் கேட்ட பத்மினிக்கு இன்னும் தலையே சுற்றியது,”ஐயோ கடவுளே 30 வருஷத்தில் இவ்வளோ மாற்றமா? நீங்க சொன்ன ஜனனமும், மரணமும் மட்டும் என்னால ஜீரணிக்கவே முடியலை, அவசியம் இந்த உலகத்துக்கு நான் போய் தான் ஆகணுமான்னு யோசிக்க வெச்சுடீங்க....”

அதற்குள் யமலோகத்திருந்து அழைப்பு வர…..

"வேண்டாம் வேண்டாம்...." என்று சொன்னபோதும் பத்மினியை தர தர வென்று இழுத்து சென்றனர் பூலோகத்திற்கு அனுப்ப....!! 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Fantasy