வர்ணங்கள்
வர்ணங்கள்
வர்ணங்கள் தான் எத்தனை- அது பெரும் வடிவங்கள் தான் எத்தனை !
கூடிக் கலந்திடவும்...
துணைத் தேடி மகிழ்ந்திடவும்...
பிறர் காணா வண்ணம் ஒளிந்து வாழ்ந்திடவும் ...
மறைந்து தாக்கிடவும்...உருமாறி
உயிரைக் குடித்திடவும்...
சாயல்கொண்டு ஏமாற்றிப் பிழைத்திடவும்...
தட்பவெப்ப நிலைமைக்கேற்ப
தன்னை மாற்றவும்...
எதிரிகள் கண்ணில் மண்ணைத் தூவவும்...தான் தன்னை தனித்துவமாக பறைசாற்றவும்...
வாழ்க்கையின் ரசனைகளும் பரந்தன எனச் சொல்லும் தத்துவார்த்தமும்...
நிலையாமையை நினைவுறுத்தலும்..
அழகை வெளிக்காட்டவும்...அவ்வழகில்
மனிதன் மனம் மாய்க்கவும்...என
வர்ணங்கள் தான் எத்தனை...அது
பெறும் வடிவங்கள் தான் எத்தனை !
நன்றியுடன்...MK🎶🕊️