வழி மாறிய பயணம்
வழி மாறிய பயணம்
முக்கிய நகரத்தின்மத்திய ரயில் நிலையம்,
அலைமோதும்
மக்கள் கூட்டம்...
சித்திரை வெயிலில்,
பிற்பகல் நேரத்தில்,
அடிமட்ட குடும்பத்தின்
மதுபோட்ட குடும்ப தலைவன்....
இரண்டு வயது சிறுமி,
இரவல் பெற்ற
தண்ணீர் குவலையுடன்,
ரசனையோடு வேடிக்கை பார்க்க...
தந்தையின் அழைப்பை,
கவனிக்க மறக்க......
பச்சிளங் குழந்தையை
பதம்பார்த்தது ,
பாச தந்தையின்
பத்து விரல்கள்!!
போதை எனும் சேற்றில் விழுந்து,
மதுவில் மூழ்கிய குடிமகன்களால் .....
பெற்ற மக்களின்
பெரு மதிப்பை
பெற இயலாது!
குடிவெறி உன்னை
கண் இருந்தும்
குருடனாக்கும்!
மதுவெறி உன்னை
மனமே இல்லாத
மிருகமாக்கும் !
மனம் மாறுவாய்
என்று சொல்லவில்லை!
மரணத்தை நாடிவிடாதே
என்று சொல்கிறேன்!
போதை எனும் பாதை
சாவை நோக்கி
பயணமாகும் ஒரு வழி பாதை!!
அதில்,
அழிவது நீ மட்டும் இல்லை
உன் குடும்பமும் தான்!!