விநாயகனே
விநாயகனே
அரைத்த மஞ்சளாம் அழகாய் பிடித்து
வரைந்த பாலகன் வளர்ந்து நின்றான்
பகவதி யவளின் பாலக னிவனாம்
தகவலு மல்லா தந்தையும் சிவனே
மலைமகள் மகனாம் மங்களச் செல்வன்
தலைமகன் கணேசன் தாயிற் காவலன்
தேவியின் அறைக்கு தேவனும் வந்தான்
மேவிய பாலகன் மெல்லத் தடுத்தே
காவல் நின்றவன் காலனை மறுத்தவன்
சேவகன் தொழிலை செவ்வனே செய்தவன்
சிவனின் சினத்தால் சீறிய சூலம்
அவனின் சிரத்தை அறுத்தது சிவனே
மணிமாறன் கதிரேசன்