வெள்ளி திரையில் திறந்த வானம்
வெள்ளி திரையில் திறந்த வானம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
மலராத மொட்டுக்கள்
மழைக்காக ஏங்க
மயக்கும் விழியோ
மலருக்காக துடிக்க ..........!!!
வாகனம் மெல்ல
வாசித்து வீதி வர
வானமோ குமுறி
வாய்விட்டு அழ ..........!!!
விலங்கோ
விடியலை தேட
விடையை அலச
விண்ணை நோக்கி மனிதன் ..........!!!
எட்டி பார்த்த மரங்கள்
எதிர்த்து நிற்கும் செடிகள்
எழாத கொடிகள்
எதற்காக ஏங்கின ..........!!!
உல்லாசமாய்
உறவுகள் சேர்த்து
உணர்வுகள் கிளர்ச்சியில்
உன்னதமான சுற்றுலா ..........!!!
நிழலை காண
நிஜமாய் நானும்
நித்திரை கனவாய்
நித்தம் நெருப்பாய் ..........!!!
வெள்ளை மனமோ
வெள்ளி திரையில்
வெளி மாளிகையா
வெட்ட திறந்த வானம் ..........!!!