உயிர்ப்பிக்கும்....
உயிர்ப்பிக்கும்....
உன்னை நான் நினைக்கும்
ஓவ்வொரு நொடியும்
என்னுள் மரணிக்கும்
தேவையற்ற எண்ணங்கள்.
காதலுடன் நீ பார்த்த
அந்த சில நொடிகளே
மீண்டும் மீண்டும் என்னை
மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கும்
என் இனியவனே
இதயத்துடிப்பினில் கலந்து
ஒலிக்கும் உன்னை
நான் மறந்த நொடிகளே
மரணம் நிகழும் எனக்குள்ளே!
