தமிழ்
தமிழ்
விண்ணதிர விளையாடும்
வீரமிகு தமிழாம்
மண்ணுலகில் ஆட்சிசெய்யும்
மறத்தமிழன் மொழியாம்
கண்ணுறங்கக் கவியுண்டு
காதலிக்கக் கவியுண்டு
உண்ணுகின்ற பொழுதில்கூட
உளம்நிறைக்கக் கவியுண்டு
எண்ணமதில் தோன்றுகின்ற
எழுத்தெல்லாம் தமிழிலுண்டு
உண்மைதனை உரத்துரைக்கும்
உள்ளமென்றும் தமிழுக்குண்டு
பெண்மைக்குத் திண்மைதரும்
பெருமிதமும் தமிழுக்குண்டு
ஆன்றோரின் வாழ்த்துகளும்
அகிலத்தோர் அகம்மகிழ்வும்
சான்றோரின் ஆசிகளும்
செந்தமிழன் மொழிக்குண்டு!