தைப் பொங்கல்
தைப் பொங்கல்
தமிழர் திருநாள் தைமுதல் நாளாம்
தமிழர் போற்றும் தைத்திரு நாளாம்
புத்தரிசி வெல்லம் புதுமையில் கலந்து
அத்துடன் பாலும் அளவில் சேர்ந்து
இனிப்பு பொங்கல் இறக்கி வைத்து
இனிமை பொங்க இறைவனை அழைத்து
கரும்பும் கிழங்கும் கலந்து படைத்து
அரும்பும் மகிழ்ச்சி அளவில் உயர்ந்து
வளரும் செல்வம் வழியை கொடுத்து
இளமை தங்கும் இயல்பை வளர்த்து
வளமை பெருகும் வாழ்க்கை நிலைத்து
குளம்போல் நிறைந்து குடும்பம் செழிக்க