புத்தாண்டு
புத்தாண்டு
புத்தாண்டின் ஓசையில்
இன்னல்கள் நீங்கட்டும்!
கதிரவனின் பொன்னொளி
பனித்துளிமேல் படர்ந்து
மின்னும் வைரங்கள்
வாழ்வின் வசந்தங்களாய்
மாறட்டும்!
தன் பிம்பத்தை
நேசிக்கும் நேரத்தில்
ஊரையும் உலகையும்
நினைத்திடுவோம்!
இருளைப் போக்கும் ஔியாய்
இவ்வாண்டு அமைய
இறைவன் அருளட்டும்!
முன்னேறிச் செல்லும்
பாதை மட்டும் நோக்கிடுவோம்!
கடந்த இன்னல்கள்
மனதில் கறையேற்றாமல்
உறுதி கொள்வோம்!
புதியதோர் உலகு செய்து
புன்னகையை முகத்தில் கொள்வோம்!
இது போல் நூறாண்டு
இன்புற்று வாழ்ந்திடுக!