புதிய பாரதம் படைக்க
புதிய பாரதம் படைக்க
இளைஞனே எழுந்திரு…
ஈடு இணையற்ற இந்தியாவை உருவாக்க!
இன்னும் எத்தனை நாட்கள் தான்
உறங்கி…. உறங்கி….. காலத்தைக் கழிப்பாய்?
பாரதத் தாயை பாரினில் உயர்த்த வேண்டும்!
என்ற எண்ணம் உன் சிந்தையில் எழவில்லையா?
ஹிம்சையை விட்டு விட்டு அஹிம்சையை பின்பற்று!
மிருகப் பண்புகளை மறந்து…
மனிதப் பண்புகளை கொண்ட மாந்தர்களை உருவாக்கு!
இலஞ்சத்தை நோக்காமல் இலட்சியத்தை நோக்கும்
இலட்சியவாதிகளை உருவாக்கு!
காலங்கள் மாறினாலும்… தன் மானத்தை
மறக்காத கன்னியவான்களை உருவாக்கு!
மக்கள் சேவையே மகேசன் சேவையெனக்
கருதும் மன்னர்களை உருவாக்கு!
தீவிரவாதமற்ற திடகாத்திர இந்தியாவை உருவாக்கு!
கத்தியைத் தீட்ட வேண்டாம் உன் புத்தியைத்தீட்டு!
சாதியைக் காட்டவேண்டாம் சாதித்துக் காட்டு!
பொறாமைக் கொள்ள வேண்டாம் போட்டிப் போடு!
கண்டதைப் பார்த்து கண்ட வழியில் செல்லாதே!
வாழ்க்கையை வகுத்து…. வள்ளுவன் வாய்மொழிக் கேட்டு நட!
உழை…. உழை… உழைத்துக் கொண்டே இரு!
உழைப்பின் பயன் உன்னை வந்து கிட்டும்!
உனது நாடும் முன்னேற்றத்தை எட்டும்!
இன்றைய உழைப்பு…. நாளைய வெற்றி!