ஒரு அனாதையின் மந்திரகோல்
ஒரு அனாதையின் மந்திரகோல்
இந்த உலகில்
எனக்கென வாழ
ஒரு ஜீவனும்
இல்லை...
பிறக்கும் போதே
தாய் தந்தையை
இழந்தவன்...
அனாதை
ஆசிரமத்தில்
அகதியாக
குடிக்கொண்டு
இருப்பவன்...
மனதில்
வலியை
நிறைத்து...
முகத்தில்
பொய்யான
புன்னகையை
சுமந்து...
நித்திம்
நித்தம்
அலைந்து
கொண்டு
இருப்பவன்...
என் வாழ்வினில்
ஒரு அற்புத
மந்திரக்கோல்
கிடைத்தால்...
அதை பயன்படுத்தி
எனக்கென்று
ஒரு குடும்பத்தை
அமைத்து...
அதில் நிஜமான
புன்னகையுடன்
சந்தோஷமாக
வாழ்வேன்...
ஆனால்...
இதெல்லாம்
நடக்கும்
விஷயமா???