மனைவி..
மனைவி..
மனைவி :-
என்னங்க நா இல்லனா என்ன செய்வீங்க?
கணவன் :-
கதவ உள் தாழ்பாள் போட்டுவிட்டு தூங்குவேன்..
மனைவி :-
அது இல்லைங்க நா செத்துட்டா என்ன செய்வீங்க?
கணவன் :-
சும்மா பொய் சொல்லாத { காமெடியாக சொல்வதை புரிந்துகொண்டாள் }
மனைவி :-
வேற கல்யாணம் பண்ணிப்பிங்களா?
கணவன் :-
இல்ல பண்ணமாட்டன்..
மனைவி :-
தோ பாருங்க, நீங்க வேற பொண்ண பாத்து கட்டிக்கோங்க.. ஆனா ஏங்கிட்ட இருக்குற மாதிரி கோவத்தையே காமிச்சுனு இருக்காதீங்க, அன்பா பேசுங்க சந்தோஷமா இருங்க..
கணவன் :-
நான் எதுவும் பதில் சொல்லவில்லை,
ஆனால் மறுநாள் டைரி எழுதுவாள் அதனால் அவள் எழுதும் டைரியில் எழுதி வைத்தேன்,
இந்த 10 வருடத்தில் உன்னிடம் மட்டும்தான் அதிகம் கோவ பட்டு இருக்கிறேன், அதனால் கோவ படாதீர்கள் என்று சொல்ற அப்போ உனக்கு நல்லா தெரியுது என்னுடைய கோவம் உனக்கு மட்டுமே சொந்தமானது..
{"என் கோவம் உனக்கு மட்டும்தான் So நீ செத்துட்டா என்னுடைய கோவமும் செத்துவிடும், நீ [ கோவம் ] இல்லாத நான் வெறும் நடை பிணம்தான்.. எனக்கு தற்கொலையில் விருப்பம் இல்லை அதனால் கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு நீ இருக்கும் இடத்துக்கே வந்துவிடுவேன்"}
சிவகண்டன் தங்கராசு

