மழை
மழை
கார்மேகம் என்னை சூழ
வெண்சுடரும் மறைந்தோட
தென்றல் காற்று மனதைத் தொட்டு
மழை வரும் காலம் இது என கூற...
மழைநீர் நிலத்தை முத்தமிட
மண் வாசமும் மேலே எழ
சின்னஞ் சிறுவர் ஓடி ஆடி
நீரில் காகிதக் கப்பல் ஓட்டி
சிறுவர் மனதின் பயத்தை பறித்தாய்
மனித மனதில் மகிழ்ச்சி விதைத்தாய்...
அடடா நீ மழை அல்லவா!
கடந்த காலம் உன்னை கண்டது
நிகழ்காலம் கண்டு விட்டது
எதிர்காலம் காண வருவாயா?
பதிலை நோக்கி ஆவலுடன்....
மனித மனம் ஏக்கத்துடன்
மழைக்கு கடிதம்...
இப்படிக்கு மனிதன்!