STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

கலைஞன்

கலைஞன்

1 min
219


கற்பனைகள்

காய்ந்து விட்டால்

கலைஞன்

சாய்ந்து விடுவான்!


கலைக்கு 

வடிவம் கொடுப்பது

ஒரு ஆழ்நிலைத்

தியானம்!


கற்பனைகளே

கலைஞனுக்கு

உணவாகும் தினம்!


வாழ்க்கையை

சங்கீதமாக 

வாழ நினைக்கும்

கலைஞனின் மனம்!


பகிர்ந்துகொள்ள

முடியாததையும்

பகிர்ந்து கொள்ள

வாக்கியங்களை

உருவாக்குபவன் கலைஞன்!


புரியாததையும்

புரிய வைக்கக

முயல்பவன் கவிஞன்!


முகக் கண்ணாடியில்

முகம் தெரியும்!

கலைஞனின் படைப்பில்

ஆன்மா மிளிரும்!







இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract