கலைஞன்
கலைஞன்
கற்பனைகள்
காய்ந்து விட்டால்
கலைஞன்
சாய்ந்து விடுவான்!
கலைக்கு
வடிவம் கொடுப்பது
ஒரு ஆழ்நிலைத்
தியானம்!
கற்பனைகளே
கலைஞனுக்கு
உணவாகும் தினம்!
வாழ்க்கையை
சங்கீதமாக
வாழ நினைக்கும்
கலைஞனின் மனம்!
பகிர்ந்துகொள்ள
முடியாததையும்
பகிர்ந்து கொள்ள
வாக்கியங்களை
உருவாக்குபவன் கலைஞன்!
புரியாததையும்
புரிய வைக்கக
முயல்பவன் கவிஞன்!
முகக் கண்ணாடியில்
முகம் தெரியும்!
கலைஞனின் படைப்பில்
ஆன்மா மிளிரும்!