காதல் 1,2,3 !
காதல் 1,2,3 !
காதல்1: என்...ன? இன்னும் சொல்...லவே இல்லையா! (வடிவேல் ஸ்டைலில்)
காதலர் தினம் வந்தது
காதலனும் வந்து விட்டேன்.
காதலி மட்டும் வரவில்லை!
ஓ…காதலை இன்னும்
சொல்லவே இல்லயே!
காதல்-2: ஆளுக்குப் பாதி!
ஆயிரம்…
காதலர் தின
வாழ்த்து அட்டைகள்!
அவள் கையில்
அவன் திணித்தான்.!
அவ்வளவு காதலா என்மேல்!
ஆசையாய்க் கேட்டாள் அவள்
‘இல்லை இல்லை இல்லை
அனைத்தையும் விற்போம்.
லாபத்தில் ஆளுக்குப் பாதி!
காதல்-3: குரு பார்வை!
‘எந்தவரன் வந்தாலும்
தட்டுகிறது உமாவிற்கு
குருபார்வை சரியில்லை’
கவலைப் பட்டாள் அம்மா!
அன்று மாலை பூங்காவில்
காதல் கடிதம் எடுத்துவந்து
உமாவிடம் கொடுத்து விட்டு
பல்லிளித்து நின்றான்
பக்கத்து வீட்டு குரு!