காணும் கனவுகளின்
காணும் கனவுகளின்
காணும் கனவுகளின் இனிமையினில்
என்றும் இன்பம் நிறையட்டும்
மாறாத எண்ணங்களின் தூய்மையில்
என்றும் வாழ்வு சிறக்கட்டும்
நாளைய பொழுதின் விடியலில்
என்றும் அமைதி தவழட்டும்.
உன்னால் என்னால் என்றுமே
இப்பூவுலகினில் மலர்கள் மலரட்டும்
துளித்துளியாய் மழைத்துளிதனில்
உலகெமெங்கும் உயிர் தழைக்கட்டும்
தாமரை இதழ்களின் வண்ணத்தினில்
வாழும் மகாலட்சுமியின்
அருள் பார்வையில் சில்லென்று
மலர்ந்திடும் எண்ணங்களின்
என்றுமே நீ நிறைந்திட வேண்டுகிறேன்.
என் மனதினில் நீங்காமல்
வீற்றிருக்கும் வரம் வேண்டி
நிற்கின்றேன் உன்னிடத்தில்
வெற்றிக் கனிகளின் சுவைதனை
நான் உணர்ந்திட வேண்டுமெனில்
எனக்குத் தேவை உன்னுடைய
ஆசிர்வாதங்களே!