எண்ணத்தின் சக்தி
எண்ணத்தின் சக்தி
வாழ்க்கையில் நான் துவண்டு இருக்கும்பொழுது,
மனதில் வரும் அணைத்து எண்ணமும் சீராகவருவதில்லை.
ஏன் இந்த தோல்வி என் அழையா விருந்தாளியாக
என்னை மட்டும் தேடி வந்து வாட்டுகிறது?
ஏன் நான் துவண்டு போகிறேன்..
இந்த நிலை என்று மாறும் வினாவியது ஏன் மனம்.
சற்றும் தளரவில்லை ஏன் மனஉறுதி
வாழ்வில் சறுக்கல் வந்தால்தான் என் மன வலிமையை
உணரமுடிந்தது மீண்டும் முன்னேற்றத்தின் பாதையில்.
என் மனதிற்கு எங்கே இருந்து இவ்வகையான ஆற்றல் வந்தது?
சட்யென்று வியந்தேன் என் பெயரை உரத்த குரலில் கேட்டவுடன்
அக்குரல் என்னது இந்த மன வலிமைக்கு காரணம்
என் அன்பு அன்னையின் குரல்!
இப்பொழுது உணர்ந்தேன் என் எண்ணத்தின் சக்தியை
என் அன்னைதான் என்னை வழிநடத்தும் சக்தி!