என் மகளுக்காக
என் மகளுக்காக
தொப்புள் கொடியை
அறுத்த போதே
தொடங்கிய பயணம் இது
ஊழியின் இழுவையில்
கைகோர்க்க முடியாத
ஊமைச் சொற்கள் நாம்
நெடுஞ்சாலை விளக்கின்
இருவேறு திசையில்
நெருங்கிச் செல்லும் நினைவுகள்
உச்சிதனை முகர்ந்திடாத
தாய்தான் நான்
உன் பாதங்களின் சக்தியாய்
பிரிவின் இழப்புகள்
இமய மலையாய்
பிணக்கில்லா புரிதல் சிகரமாய்
உறவுகளின் நிகழ்வுகள்
நமக்குள் குறைவு
உடையாத நம்பிக்கை பாத்திரத்தில்
தூரங்கள் என்செய்யும்
நம் அன்பின்
தூரலில் வெள்ளப் பெருக்கு
தோழியாய் கரைகிறாய்
உன்னைச் சுமக்கையில்
தோள்களில் பழுவே இல்லை
எங்கனம் சாத்தியமானது
உனக்கு மட்டும்
என்னைப் புதைக்காமல் விதைக்க
தாயுமானவள் நீ
என் கருவறை
தாங்கிய சேயுமானவள் நீ !!!!