சொல்ல மறுத்த கதை
சொல்ல மறுத்த கதை
வஞ்சனையில்லா காதலில்
முழ்கி இருந்தேன்...
மனதில் நிறைந்த மன்னனின்
கரத்தை காதலுடன் பிடித்தேன்...
மனைவி எனும் உரிமையை
பெருமையாக அடைந்தேன்...
ஆசையும் மோகமும் ஒன்று சேர்ந்து
என் வாழ்க்கை அழகாய் பயணித்தது...
எங்கள் காதலின் பரிசாக
ஒரு உயிர் என்னுள் வந்தது...
கூடவே மகிழ்ச்சியும் வந்தது...
காரணமில்லாமல் என்னை விட்டு
என் காதல் கணவன் விலக ஆரம்பிக்க...
வயிற்றில் பிள்ளையை கொண்டு...
துடியாய் துடித்தேன்...
சில மாதங்களுக்கு பின்னர்...
அறிந்தது...
தெரிந்தது...
அனைத்தும்...
நான் உயிராய் நினைத்த கணவன்...
எனக்கு மட்டும் மன்னவன் அல்ல...
பல பதுமைகளின் மணாளன் என்று...
என் மனம் செத்து கொண்டு இருக்க...
உடல் மட்டும் கல் போல நன்றாக இருக்க...
உயிர் விடும் எண்ணத்தில் சாக துடிய...
என் மகவு (குழந்தை) முகம் கண் முன்னே வர...
அனைத்தையும் மறந்தேன்...
மஞ்சள் தாலியை துறந்தேன்...
நெற்றிப் பொட்டை துறந்தேன்...
என் மனதையும் சேர்த்து துறந்தேன்...
என் குழந்தையே உயிரென வாழ்ந்தேன்...
குழந்தை வளர வளர
அதன் அப்பா யாரென்று கேக்க...
சொல்ல மறுக்கும் கதையை...
நான் எப்படி சொல்வேன்??