Vadamalaisamy Lokanathan

Romance

4  

Vadamalaisamy Lokanathan

Romance

காதலன் யார்

காதலன் யார்

3 mins
369


காதலன் யார்.

இளமையில் இப்படி வாழ வேண்டும் அப்படி வாழ வேண்டும் என்று நிறைய கற்பனை செய்து வைத்து இருந்தாள் நிலா.அந்த இளமை காலம் எப்படி காணாமல் போனது என்று அவளுக்கு தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகள் அவள் விருப்பம் போல காதலித்து மிகவும் மகிழ்ச்சி ஆக வாழ்க்கை போய் கொண்டு இருந்தது.

காதலித்த அருண் எப்போது திருமணம் செய்யலாம் என்று தினமும் நச்சரிப்பான்.இருவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்கள்.நிலாவிற்கு இது ஆறாவது ஆண்டு,பதவி உயர்வை எதிர்பார்த்து காத்து இருந்தாள்.அந்த பதவி உயர்வு கிடைத்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் ஒரு ஆண்டு முன்னமே அவள் படிப்பிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட முடியும்.கடனை அடைத்து விட்டு தான் திருமணம் என்று அருணிடம் கூறி இருந்தாள்.

அருணும் கேட்டு சலித்து விட்டு எப்பவோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.இதன் நடுவே அருணுக்கு மேல் அதிகாரியாக ஒரு பெண் புதிதாக வந்து சேர்ந்தாள்.அவள் அருணை விட இரண்டு வயது பெரியவள்.அவளும் வேறு நிறுவனத்தில் இருந்து புதிதாக இங்கு வேலைக்கு வந்தவள்.அவள் பெயர் பிரியா.அடிக்கடி வேலை மாற்றி,இப்போது வந்துள்ள பதவியில் ஒரு ஐந்து ஆண்டு இருக்க வேண்டும்,அப்போது தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்து இந்த நிர்வாகத்தில் சேர்ந்து உள்ளாள்.

பிரியாவிற்கு அருணை மிகவும் பிடித்து இருந்தது.அவனிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள்,என்னை திருமணம் செய்ய விருப்பமா என்று.காரணம் அடுத்த மாதம் அருணுக்கு பதவி உயர்வு கிடைத்து பிரியாவின் பதவிக்கு வேறு கிளையில் அவனுக்கு வேலை கிடைத்துவிடும்.

அதை கேட்ட அருணுக்கு சிறிது சபலம் தோன்றி விட்டது. நிலா இப்போதைக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாள் என்று நினைத்து,இனி அவளுக்காக காத்து இருப்பது வீண் என்று எண்ணி, பிரியாவிற்க்கு சம்மதம் சொல்லி விட்டு,வந்து நிலாவிடம் , சாரி நிலா பிரியாவை

திருமணம் செய்துகொள்ள போகிறேன்.உனக்காக நான் இனி காத்து இருக்க முடியாது என்று சொன்னான்.

நிலாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.ஐந்து வருடம் காத்து இருந்த இவனுக்கு இன்னும் ஒரு மாதம் காத்து இருக்க முடியாதா.

நல்லவேளை,திருமணத்திற்கு பிறகு விட்டு விட்டு ஓடி போனான் என்றால் என்ன செய்வது.இதுவும் ஒரு நன்மைக்கே என்று எண்ணி,யோசித்து முடிவு செய் என்று சொல்லி விட்டாள்.

அருண் எந்த யோசனையும் இன்றி

பிரியாவை திருமணம் செய்து கொண்டான்.அதற்கு பிறகு தான் அவனுக்கு புரிந்தது பிரியா அவனுடைய பணத்திற்கு வேண்டி தன்னை திருமணம் செய்து கொண்டதை.ஆறு மாதம் கடந்து விட்டது இன்னும் சேர்ந்து ஒரு இரவை கழிக்க வில்லை.வேலையை காரணம் காட்டி தவிர்த்து வந்தாள்.

ஆனால் அருணை நச்சரித்து விலை உயர்ந்த ஐ போன்,புதிய கார் என்று அவனுடைய பணத்தில் வசதியை கூட்டி கொண்டாள்.

நிலாவிற்கு இனி ஒருவனை தேடி திருமணம் செய்ய விருப்பம் இல்லை.அப்படி செய்தாலும் இவளுடைய பணத்திற்காக தான் இருக்கும்.வீணாகி போன இளமை இனி திரும்ப கிடைக்காது.இப்பவே அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி இருக்கிறது.தடை பட்ட மாத விலக்கு,கர்ப்ப பை கட்டி,வயிற்று வலி என்று உடல் பதிப்பு அதிகம் ஆகி கொண்டு இருந்தது.இப்போது கையில் தேவைக்கு மீறிய வசதி இருந்தது,ஆனால் அவளை அன்புடன் அரவணைக்க தான் யாரும் இல்லை.காதலர் வேண்டும் என்று விளம்பரமா கொடுக்க முடியும்.அருண் தன்னையும் ஏமாற்றி விட்டு அவனுடைய வாழ்க்கையும் இழந்து தவிக்கிறான்.

சில வருடங்கள் சென்றது.ஒரு நாள்

ஒரு பொது இடத்தில் அருணை சந்திக்க நேர்ந்தது.அப்போது அவளுடன் தான் செய்த தவறை புலம்பி தள்ளினான்.பிரியா அவனை 

இல்லற வாழ்க்கைக்கு பொருந்தாதவன் என்று காரணம் காட்டி விவாக ரத்து வாங்கி விட்டாள்.கூடவே ஒரு பெரிய தொகையை ஜீவனாம்சம் ஆகவும் வாங்கி கொண்டாள்.அருணும் அவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று கேட்டதை கொடுத்து விவாகரத்து கொடுத்து விட்டான்.

தவறை உணர்ந்து என்னை ஏற்று கொள்வாயா என்று நிலா விடம் கெஞ்சினான்.

நிலா அவனிடம் காலம் கடந்து விட்டது.உன்னிடம் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருந்தேன்.அத்தனையும் வீணாகி விட்டது.இப்போது பார் என் உடம்பை

சதை பிதுங்கி பார்க்க எனக்கே அருவருப்பாக உள்ளது.வேண்டாம் 

பயிரை அறுவடை செய்யும் நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும்.தவறு உன்னிடமா அல்லது என்னிடமா என்று தெரியவில்லை.நானும் சற்று இறங்கி வந்து இருக்கலாம்.வேண்டாம் இனி அவரவர் வழியில் சென்று விடுவோம்.ஆனால் மனதளவில் உன் மீது உள்ள அன்பு குறையவில்லை.ஒரு வேளை மனம் மாறி உன்னை ஏற்று கொள்வேனா

தெரியாது.மீண்டும் வசந்தம் வீசுமா

பொறுத்து இருந்து பார்ப்போம்.

என்று கூறி விடை பெற்றாள்.

சுபம்.



Rate this content
Log in

Similar tamil story from Romance