Vadamalaisamy Lokanathan

Fantasy

5  

Vadamalaisamy Lokanathan

Fantasy

நாய் பேசினால்

நாய் பேசினால்

2 mins
9


நாய் பேசினால்.


முகுந்தன் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு,விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கினான்.உயிர் உள்ள ஜீவன்கள் பற்றி தான் அவனுடைய முக்கிய ஆராய்ச்சி.

அதற்கென்று ஒரு ஆராய்ச்சி கூடத்தை நிறுவி,அதில் பல ஆராய்ச்சிகளை செய்து வந்தான்.


அவனுக்கு திருமணம் ஆகி எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை.

அவளுக்கு பெயர் சிட்டி.

மனைவி அரசாங்க கல்லூரி பேராசிரியை.அவருடைய சம்பளத்தில் தான் குடும்பம் நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரே மகள்,அவளுடைய பொழுது போக்கிற்கு ஒரு சின்ன நாய்க்குட்டி.


முகுந்தனின் மைத்துனர்,அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.அவரது குடும்பம் விடுமுறையில் வந்து ஒரு மாதம் முகுந்தன் வீட்டில் வசித்து வந்தார்கள்.அப்படி வந்த போது முகுந்த்தனின் பொண்ணுக்கு,ஒரு பேசும் நாய் பொம்மை பரிசாக கொடுத்தார்கள்.

சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் அது பதிலளிக்கும் விதத்தில் அதை வடிவமைத்து இருந்தார்கள்.


அதை பார்த்த சிட்டிக்கு ஒரே ஆச்சரியம்.பொம்மை பேசும் போது ஏன் தன்னுடைய நாய்க்குட்டி பேசாது என்று அவளுடைய வாதம்.அதை எப்படியாவது பேச வைக்க வேண்டும்

என்று தன்னுடைய அப்பாவிடம் சொல்ல,அதை கேட்ட,முகுந்தன்,ஒரு மாதம் கழித்து நாய்க்குட்டி பேசும்.இப்போதும் அதன் பாஷையில் பேசிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் அது உனக்கு புரியும்படி செய்து கொடுக்கிறேன்.அதற்கு பிறகு நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளலாம்என்று கூறி விட்டார்.


சந்தையில் கிடைக்கும் மொழிப்பெயர்ப்பு,மென்பொருளை விலை கொடுத்து வாங்கினார்.முதலில் சிட்டியின் நாய்க்குட்டி,குறைக்கும் அத்தனை சத்தங்களையும் ஒலிப்பதிவு செய்தார்.கூடவே அது குறைக்கும் போது செய்யும் சேட்டைகளையும்

வீடியோ பதிவு செய்தார்.

வீடியோ பதிவில் அது என்ன காரணத்திற்காக குறைக்கிறது என்று உன்னிப்பாக கவனித்தார்.ஆரம்பத்தில் இரண்டு சத்தம்.கொஞ்ச நேரம் குறைத்து விட்டு,அது இருந்த இடத்திலேயே

ஒன் மற்றும் டூ பாத்ரூம் போனது.


பாத்ரூம் போக அது  ஒரு வகையாக குறைக்கிறது என்று புரிந்து கொண்டார்.

பிறகு தெரிந்த நண்பர் முற்றத்தின் உள்ளே வந்ததும் குறைத்தது.அந்த சத்தம் வேறு விதமாக இருந்தது.

அந்த இரு சத்தத்தையும் மொழி மாற்றும் மென்பொருள் வழி போட்டுப்ப்பார்த்தார்.

அது ஒரு புது மொழியாக வெளியில் வந்தது.அதை Google translator மூலம் 

போட்டு மொழி மாற்றம் செய்து கேட்டுப்பார்த்தார்.

நாய் குறைப்பது,மொழி மாற்றம் ஆகி கேட்ட போது மிகவும் ஆச்சரியப்

பட்டு,போனார்.அவர் எதிர்பார்த்த முடிவு கிடைத்தது.

உட்க்கார், என்று சொல்லி மொழி மாற்றி கருவி மூலம் சொல்ல ,அது நாய்க்கு புரியும் மொழியில் சத்தமாக வெளி வர,நாயும் அதை புரிந்து கொண்டு,உட்கார்ந்தது.

அது போல நாய் குறைக்கும் சத்தம் சூழ்நிலைக்கு ஏற்ப பதிவு செய்து மொழி மாற்றம் செய்து கேட்ட போது,உணவு வேண்டும்,தண்ணீர் வேண்டும் என்று நாய் சொல்வது புரிந்தது.

அது போல சிட்டியை பேச வைத்து,அதை நாயின் காதில் வைத்து அதன் பாஷையில் மொழி மாற்றம் செய்ய நாய்க்கு சிட்டி பேசுவது புரிந்து அதற்கேற்ப,நாயும் செயல் பட்டது.இதை பார்த்த முகுந்தனுக்கு,ஒரே மகிழ்ச்சி.

இன்னும் சில மாற்றங்களை செய்ய 

அவருக்கு அதில் பெரிய வெற்றி.


இப்போது நாயும் மனிதனும் பரஸ்பரம் பேச முடிகிறது.நாலைந்து வகை நாய்களை வைத்து,முயற்சி செய்து பார்த்து விட்டார்.அவருக்கு அதில் 90% வெற்றி.

மகள் விரும்பிய படி,அவளுடைய செல்ல நாய்குட்டியும் மகளும் மகிழ்ச்சியாக பேசி விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.அவருடைய கண்டுபிடிப்பை காப்புரிமை சட்டத்தில் பதிவு செய்து இருக்கிறார்.யாருக்காவது அந்த மொழிமாற்றம் தேவை பட்டால் தாராளமாக அவரை அணுகலாம்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy