STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Tragedy

5  

Vadamalaisamy Lokanathan

Tragedy

வயநாடு

வயநாடு

4 mins
24

வைகாசி மாதம் நல்லதொறு முகூர்த்த நாளில்

நடைபெற்ற அந்த ஆடம்பரமான திருமணத்தை அந்த ஊர் மக்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

ஆம் அது தினேஷ் திவ்யா இருவர் இடையே மலர்ந்த காதல் பிறகு இருவரது பெற்றோர்களின் ஆசி யோடும் சம்மதத் தோடும் நடந்து முடிந்த திருமணம்.இருவருமே வசதியான குடும்பத்தில்

பிறந்து வளர்ந்தவர்கள்.இருவரும் வேறு வேறு ஊரில் பணியில் இருந்ததால்,ஒரு வார விடுமுறை முடிந்ததும் அவரவர் இடத்திற்கு திரும்ப வேண்டி இருந்தது.

திருமணமும் பெற்றோர்கள் சம்மதம் சொன்னதும் அவசர கதியில் நடந்து முடிந்து விட்டதால் எதையும் சரியாக திட்டம் இட முடியவில்லை.தேன் நிலவு கூட அப்புறம் வைத்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டனர்.இதற்கு நடுவில் வைகாசி , ஆனி முடிந்து ஆடி மாதம் வந்து விட்டது.இருவரது வீட்டிலும், ஆடி மாதம் கண்டிப்பாக பிரிந்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.இருவரும் வேறு வேறு ஊரில் இருந்ததால்,

இந்த சடங்கை கண்டிப்பாக கடை பிடிப்பார்கள் என்று நம்பி விட்டனர்.

தினேஷ் எப்போதும் மழை

காலத்தில் பயணம் செய்ய விருப்ப படுவான்.வருடா வருடம் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வதும்,அங்கு மழையில் மாட்டிக்கொண்டு,வீரதீர செயல்களுக்கு பிறகு தப்பித்து வருவதும் அவனுக்கு உற்சாகமான பொழுது போக்கு.

மற்ற நாட்களில் நண்பர்களுடன் செல்லும் தினேஷ்இந்த முறை, திவ்யாவுடன் செல்ல திட்டம் இட்டான்.

அவளும் அவனை எப்போது நேரில் பார்ப்போம் என்று ஆவலுடன் காத்து இருந்தாள்.

இவளுக்கு காவலாக அவளுடைய அம்மா பெங்களூர் வந்து கூடவே தங்கி இருந்தார்.

தினேஷ்,ஒரு இரவு திவ்யாவுக்கு கூப்பிட்டு வயநாடு வரை ஒரு சுற்றுலா திட்டம் போட்டு இருக்கிறேன்.கூட இனி ஒரு நண்பன் மனைவியை அழைத்து கொண்டு வருகிறான்,நீயும் வா என்று கூப்பிட்டான்.

அவளோ அம்மா கூடவே இருக்கிறார்கள்.என்ன காரணம் சொன்னாலும் விட மாட்டார்கள் என்று சொல்லிதயங்கினாள்.

அதற்கு அவன் விடுமுறை நாளில் சென்றால் சந்தேக படுவார்கள்.வார நாட்களில்,அலுவல் சம்பந்தமாக மீட்டிங் இருக்கிறது ஒரு நாள் வெளியூர் சென்று விட்டு அடுத்த நாள் இரவு திரும்பி விடுவேன் என்று சொல்லி விட்டு வா.மீட்டிங் என்றால் எந்த சந்தேகமும் வராது என்று அவளுக்கு யோசனை சொல்ல,அவளும் அரை மனதுடன்,அம்மாவை கேட்டு பார்க்கிறேன் என்று போனை வைத்து விட்டாள்.

திவ்யா வுக்கு அவன் கூட ஜாலியாக ஊர் சுற்ற ஆசை தான்.

ஆனால் பொய் சொல்லி விட்டு செல்வது ஏனோ அவளுக்கு மனதில் ஒரு வித இறுக்கத்தை ஏற்படுத்தியது.

தயக்கத்துடன்அம்மாவிடம்,கோழிக்கோட்டில்ஒரு மீட்டிங் இருக்கிறது,திங்கள் கிழமை காலையில் புறப்பட்டு செல்ல வேண்டும்.செவ்வாய் ஒரு நாள் தங்கி மீட்டிங் முடித்து விட்டு புதன் கிழமை மதியம் வந்து விடுவேன் என்று கூற,கண்டிப்பாக போக வேண்டுமா,அங்கெல்லாம் கடுமையாக மழை பெய்து கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டு,சரி கவனத்துடன் சென்று வா,அப்பாவிடம் சொன்னால் அனுமதிக்க மாட்டார்.

ஒரு நாள் தானே நான் சமாளித்து கொள்கிறேன் என்று கூறி அனுமதி கொடுத்து விட்டார்.

உடனே திவ்யா,தினேஷை கூப்பிட்டு சொல்ல,அவனும் திங்கள் காலை,எட்டு மணிக்கு களாசிபாலயம் வந்து விடு,அங்கு இருந்து புறப்பட்டு,நேராக மைசூர் வழியாக வயநாடு சென்று விடலாம்

இரவு தங்கி விட்டு அடுத்த நாள் செவ்வாய்கிழமை மதியம் புறப்பட்டு இரவுக்குள் பெங்களூர்

வந்து விடலாம் என்று கூற அவளும் சரியென்று சம்மதித்து விட்டாள்.

திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு,மைசூர் வந்து சேர்ந்து விட்டார்கள்,வரும் வழியில் ஒரே கொண்டாட்டம் தான்.அவளுக்கு கார் ஒட்ட அவ்வளவு பழக்கம் இல்லை,இருந்தாலும் அருகில் அவள் மீது சாய்ந்து கொண்டு அவளை ஓட்ட சொல்லி ரகளை செய்து கொண்டு வந்தது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

தினேஷ் சொன்ன நண்பன் தன் மனைவியுடன் மைசூரில் காத்து இருக்க,இரு கார்களும் வயனாட்டை நோக்கி பயணத்தை தொடங்கியது.புறப்படும் போதே மழை தொடங்கி விட்டது.குளிருக்கு அவனுடைய அணைப்பில் பயணம் செய்ய அவளுக்கு ரொம்பவுமே

கிளுகிளுப்பாக இருந்தது.

வயநாட்டை நெருங்க நெருங்க மழை அதிகமாக பெய்ய தொடங்கியது.இருட்டும் தொடங்கி விட்டதால் மேற்கொண்டு இவர்கள் செல்ல வேண்டிய ரிசார்ட் சாலையில் தண்ணீர் அதிகப்படியாக ஓடிக்கொண்டு இருந்ததால்,நண்பன்,முண்டைக்கை என்னும் இடத்தில்,தெரிந்த நண்பன் இருக்கிறான், என்று அவனை கூப்பிட்டு இரவு மணி எட்டாகி விட்டது, ரிசார்ட் போக முடியாமல் நிற்கிறோம்,இன்று இரவு மட்டும், தங்க இடம் கிடைக்குமா என்று கேட்க,அவனும் அந்த ஊரில் இருந்த ஒரு சுமாரான லாட்ஜில்,அதுவும் பல வருடங்களுக்கு முன்பு கட்டியது

இரு அறை ஏற்பாடு செய்து கொடுக்க,இருவரும் கார்களை

லாட்ஜில் முன்புறம் நிறுத்தி விட்டு

அறையில் சென்று தங்கினார்கள்.

திவ்யா அவனுடன் சேர்ந்து தங்கி 

பல நாட்கள் ஆகி விட்டதால்,

அவனை அணைத்து கொண்டு படுக்கையில் படுத்து கிடந்தாள். படுக்க போகும் முன்பு மனம் ஏனோ சஞ்சல படதிவ்யா அம்மாவை கூப்பிட்டு கோழிக்கோடு போகும் வழியில் மழை அதிகமாக இருந்ததால் வயனாட்டில்

இரவு தங்கி விட்டு

காலையில் புறப்படுவோம் என்று மட்டும் சொல்ல,என்னடி சொல்றே 

அங்கெல்லாம் மழை கொட்டிக்கொண்டு இருக்கு, டிவில் பார்த்தேன்,எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல,இவளும் பயப்பட வேண்டாம் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள தினேஷும் அவருடைய நண்பர்களும் வந்து இருக்கிறார்.எல்லோரும் பத்திரமான இடத்தில் தங்கி இருக்கிறோம்.என்று சொல்ல

என்னடி பொய் சொல்லி விட்டு 

போய் இருக்கிரியா என்று அம்மா சத்தம் போட அம்மா விடும்மா

Safe ஆக தான் இருக்கிறோம்.

நாளைக்கு ராதிரிக்குள் வந்து விடுவோம் என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டாள்.

திவ்யா வின் அம்மாவுக்கு தினேஸ் மீது சரியான கோபம்,அவ் தான் இந்த திட்டத்தை சொல்லி அவளை கட்டாய படுத்தி இருப்பான்.

இப்ப திவ்யா அப்பா கேட்டால் என்ன சொல்வது என்று ராத்திரி முழுவதும் உறக்கம் வரவில்லை.

திவ்யாவும் அவள் தங்கி இருந்த லாட்ஜில் விலாசத்தை எதுக்கும் இருக்கட்டும் என்று அம்மாவுக்கு அனுப்பி இருந்தாள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேர்ந்த தினேஷ் திவ்யா களிப்பில் மிதந்தனர்.இரவு இரண்டு மணிக்கு களைப்பில் உறங்கி போனார்கள்.

அதிகாலை மழையும் அருவி போல கொட்ட தொடங்கியது.இடி இடித்தது போல பயங்கர சத்தம்.

மலை மீது இருந்து பாறைகளும் மரங்களும் வேரோடு சாய்ந்து 

அடிவாரத்தை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது.வந்த வேகத்தில் முண்டகை என்ற இடமே

மண்ணுக்குள் புதைந்து விட்டது.

மண்ணுக்குள் எத்தனை பேர் உறக்கத்தில் புதைந்து போனார்கள் என்று தெரியாது. மேடு பள்ளங்கள் 

ஆக இருந்த முண்டக்கை இப்போது ஒரு சமவெளி போல காட்சி அளித்தது.

அடுத்த நாள் காலை திவ்யா போனுக்கு அவளுடைய அம்மா கூப்பிட அழைப்பு போகவில்லை.

உடனே ஒரு சந்தேகத்தில் தொலைகாட்சி பெட்டியில் செய்தியை போட,வயநாடு புதைந்து கொண்டு இருக்கிறது 

முண்டக்கை என்ற இடமே காணாமல் போய் விட்டது என்று செய்தி சொல்லி கொண்டு இருந்தார்கள்.

ஐயோ மகளே இப்ப உன் அப்பாவுக்கு என்ன சொல்ல போகிறேன் என்று தலையை அடித்து கொண்டு திவ்யா அம்மா அழுக,வேறு வழி தெரியாமல் கணவனுக்கு போன் செய்து 

திவ்யா கோழிக்கோடு போனதும் 

நடுவில் வயநாட்டில் தங்கியதும் கூற,அவருக்கு புரிந்து விட்டது.

அவரும் வய நாட்டில் உள்ள,அவசர கால எண்ணை தொடர்பு கொண்டு விவரம் கேட்க,இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம் சரியான விவரம் தெரிய,இப்போது உயிரோடு இருப்பவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ராணுவம் வந்து கொண்டு இருக்கிறது.மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால்

மேப்பாடி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு செல்லவும் என்று கூறி விட்டார்கள்.

இறந்து போன சடலங்கள் அங்கு தான் வைக்கப்பட்டு இருக்கிறது 

திவ்யாவின் அப்பா, தினேஷின் பெற்றோருக்கு தகவல் சொல்ல 

எல்லோரும் மழையோடு மழையாக வயநாடு புறப்பட்டார்கள்.

ஆனால் பாலகாட்டை தாண்டி செல்ல முடியவில்லை அவ்வளவு மழை.என்ன செய்வது என்று தெரியாமல் சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டார்கள்.ஆனால் மகளும் மருமகனும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டார்கள்.

மீட்பு பணி நிறைவு பெற்றால் மட்டுமே,இவர்களும் இறந்து விட்டார்களா,இல்லை பாதுகாப்பாக எங்காவது தங்கி இருக்கிறார்களா என்று தெரியும்.முண்டக்கையில் தங்கி இருந்தால் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை.

மழை அந்த இடத்தை சாலை வழியாக செல்ல முடியாமல்

துண்டித்து இருந்தது.

மீட்பு பணி எப்போது முடியும்,

மகளையும் மாப்பிள்ளையையம் உயிரோடு பார்ப்போமா இல்லை புதைந்து மண்ணோடு மண் ஆகி இருப்பார்களா என்று நாட்கள் கடந்தால் தான் தெரியும்.கவலையுடன் பெற்றோர்கள் காத்து இருக்கி

றார்கள்.


முற்றும்.

பின்குறிப்பு கதை சம்பவத்தை வைத்து கற்பனையில் எழுத பட்டது யாரையும் குறிப்பிடவில்லை.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Tragedy