STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

இன்ஸ்பெக்டர் சேகர்

இன்ஸ்பெக்டர் சேகர்

3 mins
384

இன்ஸ்பெக்டர் சேகர்.


சேகர் அவருடைய துறையில் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

அவருடைய கையில் கிடைத்தால் 

அவன் செய்த குற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்க்கை பூராவும் காலம் தள்ளும் நிலைக்கு அவனை ஆக்கி விடுவார்.

மற்றவரை போல யாருடைய உயிரையும் அவர் பறித்தது இல்லை.அதற்கு மாறாக அவனுடைய வாழ்க்கை முழுவதும்

ஒரு நல்ல காரியம் செய்ய வைத்து விடுவார்.அதை நினைத்தால் அவனுக்கு இன்ஸ்பெக்டர் நினைவிற்கு வருவார்.அந்த அளவிற்கு அவருடைய தண்டனை இருக்கும்.

உயிரை பறிப்பது சுலபம்.ஆனால் அவனை பற்றிய சரித்திரம் அதோடு முடிந்து விடும்.

அவருடைய யுக்தி,அவனும் உயிருடன் இருக்க வேண்டும்.அவன் செய்த குற்றங்களுக்கு அவன் அனுபவிக்கும் தண்டனையும் மக்களுக்கு தெரிய வேண்டும்.அவனும் வாழும் ஒவ்வொரு நாளும் அவன் செய்த தவறை உணரும் விதத்தில் அவனுக்கு கிடைத்த தண்டனை இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

அந்த ஊரில் அவன் ஒரு பிரபல போக்கிரி.எதற்கும் அஞ்ச மாட்டான்.குறுக்கே யார் வந்தாலும் தயவு பார்க்காமல் அடித்து துன்புறுத்தி விடுவான்.அப்படி ஒருவன் இன்ஸ்பெக்டர் சேகருக்கு சவாலாக இருந்தான்.அவனை பிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.அவன் செய்த குற்றத்திற்கு எந்த தடயமும் சாட்சியும் இல்லாதவாறு பார்த்து கொள்வான்.

அந்த போக்கிரியை நேரில் சந்திக்க யாருக்கும் தைரியம் இல்லை. அது மட்டும் அல்ல,அவனுடைய புற தோற்றம் அவனை சமூகத்தில் ஒரு வசதியான நபராக தான் காட்சி அளித்து வந்தான்.சமூகத்தில் ஒரு நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்து இருந்தான்.

அப்படி உள்ளவனை எப்படி அவன் செய்த குற்றத்திற்கு அவனை கைது செய்வது.அவனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லவும் வருவது இல்லை.

ஆனால் தொடர்ந்து அவன் குற்றங்களை செய்து கொண்டு தான் இருந்தான்.அவன் செய்யும் குற்றங்களை தான் செய்ததாக கூறி வேறு சிலர் போலீசில் சரண் அடைந்தார்கள்.

இவருக்கும் அவனை எப்படி சிக்க வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்தார் .

அந்த ஊரில் இருந்து இன்னும் ஒரு வருடத்தில் அவரை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள்.நாட்கள் வேகமாக ஓடி கொண்டு இருந்தது.

அப்போது ஒரு பெண் பத்து வயது பெண் குழந்தையுடன்

காவல் நிலையத்திற்கு வந்து தான் ஒரு விதவை,எனக்கு பாதுகாப்பு இல்லை.சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வீட்டு கதவை தட்டி பயமுறுத்திகொண்டுஇருக்கிறார்கள் என்று புகார் அளித்தாள்.

அந்த புகாரில் அந்த போக்கிரியின் பெயரை சேர்த்த சொன்னார்.அந்த பெண்ணும் போக்கிரி மீது புகார் அளிக்க,அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து

போக்கிரியை கைது செய்து கோர்ட்டில் வழக்கு நடந்தது..அவன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழையும் கண்காணிப்பு கேமரா ஆதாரங்களை கோர்ட்டில் சேகர் சமர்ப்பித்தார்.அந்த பெண்ணின் குழந்தையும் அந்த போக்கிரி  அம்மாவை வந்து அடித்து துன்புறுத்தி தகாத வார்த்தைகள் பேசி, பயமுறுதினார் என்று சாட்சி சொன்னது.

அதற்கு கோர்ட் அவனுக்கு அபராதமும்,அந்த பெண் விரும்பும் வரை,அந்த பெண்ணின் குடும்பத்தை அவன் தான் பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது.தண்டனையை மீற முடியாமல்,அந்த பெண்ணின் குடும்பத்தை அந்த போக்கிரி பராமரித்து வருகிறான்.

உண்மையில் நடந்தது,அந்த பெண் இருந்த வீட்டிற்கு பக்கத்து அடிக்கடிஅங்கு செல்வான்.அது தான் கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த வீட்டில் இவனுக்கு தேவையான ஆயுதங்களைஅங்கு தான் பதுக்கி வைத்து இருந்தான் அதை எடுக்கவும்,வைக்கவும் அடிக்கடி அங்கு சென்று வந்தான்.ஆனால் அதை அவன் கோர்ட்டில் சொல்ல முடியாத சூழ்நிலை..அதனால் அந்த பெண் சொன்ன குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி ஆகி விட்டது..அதை வைத்து,அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டார்.இப்போதும் அந்த குடும்பத்தை அவன்தான் பராமரித்து வருகிறான்.ஒரு குற்றத்தை மறைக்க செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து விட்டார் இன்ஸ்பெக்டர் சேகர்.ஊருக்குள் சொல்லும் போது அவனுடைய அடியாள் ஒருவனின் குடும்பம்,.அவன் ஒரு தகராறில் இறந்து போனதால் அந்த குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை தான் ஏற்று கொண்டதாக கூறி வருகிறான்.

முற்றும்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Abstract